Latest Updates
-
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... தாபா ஸ்டைல் பச்சை பயறு தால்
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, நாண் அல்லது புல்கா செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பயறை கொண்டு தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் செய்யுங்கள். இந்த தால் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
இந்த ரெசிபியில் புரோட்டின் அதிகம் இருப்பதால், இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. உங்களுக்கு தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பச்சை பயறு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் பாசி பயறை 3 கப் நீரில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி தானதும், இஞ்சி,
தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து, மஞ்சள் தூள், கரம்
மசாலா, சுவைக்கேற்ப உப்பு தூவி, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை
மூடி வைத்து, 3-4 விசில் விட வேண்டும்.
* பிறகு மிதமான தீயில் வைத்து, மீண்டும் 10 நிமிடம் பயறை வேக வைத்து
இறக்க வேண்டும். விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவ
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, குக்கரில்
உள்ள தால் உடன் சேர்த்து கிளறினால், சுவையான தாபா ஸ்டைல் பச்சை பயறு
தால் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications