Latest Updates
-
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
தேங்காய் சட்னியை ஒருமுறை இந்த பக்குவத்துல செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா தாறுமாறா இருக்கும்...
Coconut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அதுவும் இதற்கு அடிக்கடி தேங்காய் சட்னியைத் தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? எப்போதும் தேங்காய் சட்னியை ஒரே சுவையில் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் தேங்காய் சட்னியை வேறு விதத்தில் அரையுங்கள்.
தேங்காய் சட்னியை வேறு எப்படி அரைப்பது என்று கேட்கலாம். பொதுவாக தேங்காய் சட்னியில் பச்சை மிளகாய் தான் சேர்ப்போம். ஆனால் அடுத்தமுறை தேங்காய் சட்னி அரைப்பதாக இருந்தால் வரமிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக தாளிப்பதற்கு நல்லெண்ணெயை பயன்படுத்துங்கள். இதனால் சட்னி இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு வரமிளகாய் சேர்த்து தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரமிளகாய் சேர்த்து செய்யும் தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* வரமிளகாய் - 6
* வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* பூண்டு - 4 சிறிய பல்
* கல் உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 7-8 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1/2 மூடி துருவிய தேங்காய், 5-6
வரமிளகாய், பாதி வெங்காயம் மற்றும் 4 சிறிய பல் பூண்டு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப கல் உப்பு, சிறிய துண்டு புளி, 2 டேபிள்
ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, ஓரளவு கொரகொரவென்று அரைத்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சட்னி இட்லிக்கு என்றால் சற்று நீரை அதிகமாகவும், தோசைக்கு
என்றால், நீரை குறைவாகவும் ஊற்றிக் கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெயை 3 டீஸ்பூன் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications