Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.. சௌ சௌ பொரிச்ச கூட்டு
Chow Chow Poricha Kootu: தினமும் மதியம் சாதத்துக்கு பொரியல், கூட்டு என ஏதாவது ஒன்று செய்வீர்களா? இன்று மதியம் சாதத்திற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ காய் உள்ளதா? அப்படியானால் அந்த சௌ சௌ காயைக் கொண்டு ஒரு கூட்டு செய்யுங்கள்.
இந்த சௌ சௌ பொரிச்ச கூட்டு சாதத்திற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருப்பதோடு, இதை சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த கூட்டு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான சுவையில் இருக்கும்.

மாலை வேளையில் நீங்கள் வீட்டிற்கு சென்றதும், சப்பாத்திக்கு ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய நினைத்தால், இந்த சௌ சௌ பொரிச்ச கூட்டு செய்யலாம். இதனால் ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தை, இன்னொரு சப்பாத்தியை வாங்கி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சௌ சௌ பொரிச்ச கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ பொரிச்ச கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சௌ சொள - 1
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் பாசிப்பருப்பை கழுவி, அதை குக்கரில் போட்டு 2 கப் நீரை ஊற்றி,
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 2
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துண்டுகளாக்கப்பட்ட சௌ சௌ காயை சேர்த்து, சிறிது உப்பு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை குக்கரில் உள்ள காயுடன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலை பருப்பு
சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கூட்டுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான சௌ சௌ பொரிச்ச கூட்டு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications