Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.. சௌ சௌ பொரிச்ச கூட்டு
Chow Chow Poricha Kootu: தினமும் மதியம் சாதத்துக்கு பொரியல், கூட்டு என ஏதாவது ஒன்று செய்வீர்களா? இன்று மதியம் சாதத்திற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ காய் உள்ளதா? அப்படியானால் அந்த சௌ சௌ காயைக் கொண்டு ஒரு கூட்டு செய்யுங்கள்.
இந்த சௌ சௌ பொரிச்ச கூட்டு சாதத்திற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருப்பதோடு, இதை சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த கூட்டு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான சுவையில் இருக்கும்.

மாலை வேளையில் நீங்கள் வீட்டிற்கு சென்றதும், சப்பாத்திக்கு ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய நினைத்தால், இந்த சௌ சௌ பொரிச்ச கூட்டு செய்யலாம். இதனால் ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தை, இன்னொரு சப்பாத்தியை வாங்கி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சௌ சௌ பொரிச்ச கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ பொரிச்ச கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சௌ சொள - 1
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் பாசிப்பருப்பை கழுவி, அதை குக்கரில் போட்டு 2 கப் நீரை ஊற்றி,
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 2
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துண்டுகளாக்கப்பட்ட சௌ சௌ காயை சேர்த்து, சிறிது உப்பு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை குக்கரில் உள்ள காயுடன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலை பருப்பு
சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கூட்டுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான சௌ சௌ பொரிச்ச கூட்டு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications