Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
சௌ சௌ காயை வெச்சு.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு சும்மா அள்ளும்..
Chow Chow Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இன்று காலை இட்லி அல்லது தோசை செய்ய போறீங்களா? என்ன சட்னி செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? சற்று வித்தியாசமான, அதே சமயம் சுவையான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ காய் உள்ளதா?
அப்படியானால் அந்த காயைக் கொண்டே அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம். இந்த சௌ சௌ சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுவும் இட்லி தோசைக்கு இந்த சட்னியை செய்தால், ஒரு இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை இன்னொரு இட்லி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சௌ சௌ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சௌ சௌ காய் - 250 கிராம்
* தக்காளி - 2
* பூண்டு - 1 பல்
* பச்சை மிளகாய் - 3
* கொத்தமல்லி - 1 கையளவு
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
* கல் உப்பு - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும். அதேப் போல் தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சௌ சௌ காயைப் போட்டு,
அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை,
மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் மத்து கொண்டு மசித்து சட்னியாக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான சௌ சௌ சட்னி தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications