Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
மணமணக்கும்... செட்டிநாடு பூண்டு குழம்பு
செட்டிநாடு ரெசிபிக்களை வீட்டில் செய்ய முயற்சிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இன்று ஒரு அற்புதமான செட்டிநாடு ரெசிபியைக் காண்போம். அது தான் செட்டிநாடு பூண்டு குழம்பு.
நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களின் பிரியரா? செட்டிநாடு ரெசிபிக்களை வீட்டில் செய்ய முயற்சிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இன்று ஒரு அற்புதமான செட்டிநாடு ரெசிபியைக் காண்போம். அது தான் செட்டிநாடு பூண்டு குழம்பு. இந்த பூண்டு குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நீங்கள் வழக்கமாக செய்யும் பூண்டு குழம்பு உங்களுக்கு பிடிக்காவிட்டால், செட்டிநாடு பூண்டு குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். இந்த குழம்பில் மசாலாவை அரைத்து சேர்ப்பதால், இது தனித்துவமான சுவையைக் கொண்டுள்ளது.

உங்களுக்கு செட்டிநாடு பூண்டு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பூண்டு குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 20 பற்கள்
* தக்காளி - 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5-7
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெங்தயம் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை உரித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் புளியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை கையால் பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள மல்லி, வரமிளகாய், கடலைப் பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்து, மேலே எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு பூண்டு குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
