Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
செட்டிநாடு பெப்பர் காளான் ரெசிபி... இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பாரை விட இது பக்காவாக இருக்கும்..ட்ரை பண்ணுங்க!
Chettinad Mushroom Pepper Masala Recipe in Tamil: செட்டிநாடு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சுவையான உணவுகள்தான். செட்டிநாடு உணவுகள் என்றாலே அவை சுவையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஆழமாக உள்ளது. இப்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது அவசியம், ஆரோக்கியமான உணவுகள் சுவையாகவும் இருப்பது கூடுதல் நன்மையாகும்.
சிக்கன், மட்டனுக்கு பிறகு மக்கள் அதிகம் விரும்பும் ஒரு பொருள் என்றால் அது காளான்தான். பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த காளானை செட்டிநாடு ஸ்டைலில் மசாலா செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்துடன் சுவையையும் கொடுக்கும். இந்த செட்டிநாடு காளான் மிளகு மசாலா இட்லி, தோசை, சப்பாத்தி ஏன் சாதத்திற்கும் கூட பக்காவாக இருக்கும். இந்த சூப்பரான செட்டிநாட்டு காளான்மிளகு மசாலாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:
- காளான் - 200 கிராம்
- பெரிய வெங்காயம் - 1
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் 50 மில்லி
அரைப்பதற்கு:
- தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- மல்லி விதை - 2 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 2 ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- அன்னாசிப்பூ - 1
- பட்டை - 2
- கிராம்பு 2
வதக்கி அரைக்க:
- சின்னவெங்காயம் - 10 முதல் 15
- தக்காளி - 2
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 10 பல்
செய்முறை:
- முதலில் துருவிய தேங்காயை பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும்
- பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.
- மசாலாவை செய்ய கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு அதன்பின் நறுக்கி பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
- தக்காளி, வெங்காயத்தின் பச்சை வாசனை போனவுடன் அரைத்து வாய்த்த மசாலாவை சேர்க்கவும்.
- அதன்பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் நன்கு கொதிக்க விடவும். மசாலா நன்கு வந்ததும் நறுக்கி வைத்த காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி தயார். இது மழை நேரத்தில் இட்லி, தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











