Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சப்பாத்தி குருமாவை ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க.. வீட்டுல இருக்குறவங்க கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
Chapathi Kurma Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்ய உங்கள் வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லையா? வெறும் வெங்காயமும், தக்காளியும் தான் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டைக் கொண்டு ஒரு சுவையான சப்பாத்தி குருமாவை செய்யலாம்.
இந்த சப்பாத்தி குருமாவிற்கு கூடுதலாக பொட்டுக்கடலையை அரைத்து பொடி செய்து சேர்க்க வேண்டும். இது தான் இந்த ரெசிபியின் ஹீரோ. முக்கியமாக இந்த சப்பாத்தி குருமா 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். அதோடு இந்த குருமாவை செய்தால் வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் சப்பாத்தியை சாப்பிடுவார்கள். அந்த அளவில் மிகவும் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு சப்பாத்தி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 2
* தக்காளி - 1
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சோம்பு சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து
பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் சோம்பு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவு நீரில் நன்கு
கட்டிகளின்றி கரைத்து, தக்காளி வதங்கிய பின் ஊற்றி கிளறி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் சிறிது உப்பு தூவி, தேவையான அளவு நீரையும்
ஊற்றி, 10 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சப்பாத்தி குருமா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











