Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
கடலைப்பருப்பு அல்வா
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏதாவது செய்து கொடுப்பீரா? இன்று என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இன்று கடலைப்பருப்பு அல்வா செய்து கொடுங்கள்.
உங்களுக்கு வித்தியாசமான ரெசிபிக்கள் செய்ய பிடிக்குமா? அதுவும் மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏதாவது செய்து கொடுப்பீரா? இன்று என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இன்று கடலைப்பருப்பு அல்வா செய்து கொடுங்கள். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டசாகமான ருசியில் இருக்கும். அதோடு இதில் புரோட்டீன் உள்ளதால், குழந்தைகள் சாப்பிடுவதும் நல்லது.

கீழே கடலைப்பருப்பு அல்வா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு - 1/2 கப்
* நெய் - 1/8 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* பால் - 1/2 கப் + 1 டேபிள் ஸ்பூன்
* குங்குமப்பூ - சிறிது
* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
* நறுக்கிய பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதைக் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவைப் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதி நெய்யை ஊற்றி, அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பைப் போட்டு குறைவான தீயில் கட்டிசேராதவாறு கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் போது கடலைப் பருப்பின் நிறம் மாறி, அதிலிருந்து வீசும் பச்சை வாசனை போனதும், அதில் குங்குமப்பூ பால் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.
* பருப்பானது நன்கு மென்மையாக மற்றும் முழுமையாக வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் வேளையில், கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். அந்நிலையில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி விட வேண்டும். அப்போது அந்த கலவை வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாமை சேர்த்து கிளறி இறக்கினால், கடலைப்பருப்பு அல்வா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications