Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
கடலைப்பருப்பு அல்வா
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏதாவது செய்து கொடுப்பீரா? இன்று என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இன்று கடலைப்பருப்பு அல்வா செய்து கொடுங்கள்.
உங்களுக்கு வித்தியாசமான ரெசிபிக்கள் செய்ய பிடிக்குமா? அதுவும் மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏதாவது செய்து கொடுப்பீரா? இன்று என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இன்று கடலைப்பருப்பு அல்வா செய்து கொடுங்கள். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டசாகமான ருசியில் இருக்கும். அதோடு இதில் புரோட்டீன் உள்ளதால், குழந்தைகள் சாப்பிடுவதும் நல்லது.

கீழே கடலைப்பருப்பு அல்வா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு - 1/2 கப்
* நெய் - 1/8 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* பால் - 1/2 கப் + 1 டேபிள் ஸ்பூன்
* குங்குமப்பூ - சிறிது
* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
* நறுக்கிய பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதைக் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவைப் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதி நெய்யை ஊற்றி, அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பைப் போட்டு குறைவான தீயில் கட்டிசேராதவாறு கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் போது கடலைப் பருப்பின் நிறம் மாறி, அதிலிருந்து வீசும் பச்சை வாசனை போனதும், அதில் குங்குமப்பூ பால் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.
* பருப்பானது நன்கு மென்மையாக மற்றும் முழுமையாக வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் வேளையில், கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். அந்நிலையில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி விட வேண்டும். அப்போது அந்த கலவை வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாமை சேர்த்து கிளறி இறக்கினால், கடலைப்பருப்பு அல்வா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications









