Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
கேரட் வாங்குனா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் தொக்கு செய்யுங்க... இட்லி, தோசைக்கு சூப்பர் சைடிஷா இருக்கும்...!
Carrot Thokku Recipe in Tamil: பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி மற்றும் சாம்பார் போன்றவற்றைத்தான் அனைத்து வீடுகளிலும் சைடிஷாக செய்வார்கள். எதுவுமே இல்லாத சமயத்தில் இட்லி பொடி கூட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் இட்லி, தோசைக்கு தொக்கு முயற்சித்திருக்க மாட்டார்கள். ஏனெனில் தொக்கு என்றாலே பொதுவாக அது சாதத்திற்கு என்ற எண்ணம் நம்மிடம் வந்து விட்டது.
உண்மையில் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு தொக்கு வகைகள் அட்டகாசமாக இருக்கும். அதிலும் நாம் இப்போது பார்க்கப்போகும் கேரட் தொக்கை 1 வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும், மேலும் இது மிகவும் ஆரோக்கியமானது.

உங்களுக்கு கேரட் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆரோக்கியமான கேரட் தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கேரட் - கால் கிலோ
- புளி - நெல்லிக்காய் அளவு
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
- கேரட்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து ஈரம் போகும் படி நன்றாகத் துடைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தோலை சீவி விட்டு நன்றாக துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வெறுமனே பெருங்காயம், வெந்தயத்தை வறுத்துப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்தவுடன் கடுகை போட்டு வெடிக்க விடவும்.
- கடுகு நன்கு பொறிந்தவுடன் கேரட் துருவலை சேர்த்து போட்டு நன்கு வதக்கவும். கேரட் நன்கு சுருங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் நன்றாக வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீரில் கரைத்த புளியை ஊற்றவும்.
- கலவை நன்றாக கொதித்து கெட்டியாக சுருண்டு வரும் வரையில் வேக விடவும். இடையிடையே நன்றாக கிளறி விடவும்.
- இறுதியாக அரைத்து வைத்த வெந்தயம், பெருங்காயப் பொடியைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
- ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடிகளில் பத்திரப்படுத்தி வைத்தால் இதை பல நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
- கேரட் இயல்பாகவே இனிப்புச் சுவை உடையது என்பதால் அதிக காரத்தை விரும்புபவர்கள் அதற்கு ஏற்றவாறு மிளகாய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
- கேரட் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதால் இதை அடிக்கடி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கவும்.
- இந்த கேரட் தொக்கு இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications