Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
1/2 கப் தேங்காயும், 1 கப் கேரட்டும் இருந்தா இந்த குருமாவை வையுங்க... தோசைக்கு மட்டன் குருமா மாறியே இருக்கும்!
Carrot Masala Kurma Recipe in Tamil: இரவு வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை அல்லது சப்பாத்தி தான் டின்னராக இருக்குமா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் அசைவ குருமாவை மறக்கடிக்கும் வகையில் ஒரு சூப்பரான சைவ குருமாவை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் ஒரு கப் கேரட்டும், கொஞ்சம் தேங்காயும், தக்காளியும் இருந்தால், அட்டகாசமான சுவையில் குருமா செய்யலாம். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த கேரட் குருமா சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு சூப்பரான கேரட் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய கேரட்- அரை கிலோ
- நறுக்கிய தக்காளி - 2
- தேங்காய் துருவல் - அரை கப்
- பச்சை மிளகாய் - 6
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- கசகசா - 1 டீஸ்பூன்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 2
- பட்டை - 1
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை :
- முதலில் கேரட்டை நன்றாக கழுவி விட்டு மூழ்கும் அளவு தண்ணீரில் போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், கசகசா போட்டு மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளிக்கவும்.
- பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தாளிக்க வேண்டும்.
- இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
-பின்னர் மஞ்சள் தூள் மற்றும் வேக வைத்துள்ள கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காய், கசகசா கலவை ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
- குழம்பானது சற்று கெட்டியானதும், கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான கேரட் குருமா ரெடி!
- இந்த கேரட் குருமா தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











