Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சிம்பிளான... கேரட் குருமா
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெறும் கேரட் மற்றும் பீன்ஸ் மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அவற்றை மட்டும் கொண்டு அற்புதமான குருமா செய்யலாம்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெறும் கேரட் மற்றும் பீன்ஸ் மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அவற்றை மட்டும் கொண்டு அற்புதமான குருமா செய்யலாம். இந்த கேரட் குருமா செய்வது மிகவும் சுலபம் மற்றும் பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால் இதை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

உங்களுக்கு கேரட் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - ஒரு கையளவு (நறுக்கியது)
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
* பூண்டு - 4-5 பல்
* வரமிளகாய் - 4-5
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கேரட் குருமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











