Just In
- 48 min ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 1 hr ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 2 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 2 hrs ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
சிம்பிளான... கேரட் குருமா
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெறும் கேரட் மற்றும் பீன்ஸ் மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அவற்றை மட்டும் கொண்டு அற்புதமான குருமா செய்யலாம்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெறும் கேரட் மற்றும் பீன்ஸ் மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அவற்றை மட்டும் கொண்டு அற்புதமான குருமா செய்யலாம். இந்த கேரட் குருமா செய்வது மிகவும் சுலபம் மற்றும் பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால் இதை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.
உங்களுக்கு கேரட் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - ஒரு கையளவு (நறுக்கியது)
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
* பூண்டு - 4-5 பல்
* வரமிளகாய் - 4-5
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கேரட் குருமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi