Latest Updates
-
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மொறுமொறுப்பான... ப்ராக்கோலி மசாலா வடை
உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் இருப்போர் வடையை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் ப்ராக்கோலி உள்ளதா? அப்படியானால் அந்த ப்ராக்கோலியைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா வடையை செய்து கொடுங்கள். இந்த ப்ராக்கோலி மசாலா வடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
ப்ராக்கோலியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அடிக்கடி ப்ராக்கோலியை உணவில் சேர்ப்பது நல்லது. உங்களுக்கு ப்ராக்கோலி மசாலா வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி மசாலா வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி - 250 கிராம்
* பாசிப் பருப்பு - 1/4 கப்
* கடலை பருப்பு - 1/4 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் கடலை பருப்பு, பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் கழித்து, பருப்புக்களை நன்கு கழுவி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சோம்பு, வரமிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் .
* பின்பு ப்ராக்கோலியை ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்து, அதையும் பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம், புதினா இலைகளை சேர்த்து நன்கு கையால் பிசைய வேண்டும்.
* பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ப்ராக்கோலி மசாலா வடை தயார்.
குறிப்பு:
* வடையில் புதினாவை சேர்த்தால், ப்ளேவர் இன்னும் சூப்பராக இருக்கும்.
* வடை கலவையானது கெட்டியாக இருக்க வேண்டும். அப்படியானால் தான் வடை மொறுமொறுவென்று இருக்கும்.
* ஒருவேளை வடை மசாலா மிகவும் நீராக இருந்தால், சிறிது அரிசி மாவை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
Image Courtesy: premasculinary



Click it and Unblock the Notifications