Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. மதியம் சிம்பிளா இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட..
Drumstick Leaves Thogayal Recipe In Tamil: மதிய வேளையில் எப்போதும் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாக, அதே சமயம் உடலுக்கு வலு சேர்க்கும் ஒரு சைடு டிஷ் செய்து சாதத்துடன் சாப்பிட நினைக்கிறீர்களா? வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார், பொரியல் என்று செய்யாமல், துவையல் செய்து சாப்பிடுங்கள்.
இப்படி ஒருமுறை முருங்கைக்கீரை துவையலை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். அந்த அளவில் நன்றாக இருக்கும். முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு இப்படி அடிக்கடி செய்து கொடுக்கும் போது, அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 10
* கடுகு - 1 டீஸ்பூன்
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 எலுமிச்சை அளவு
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* தாளிப்பு வடகம் - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை சிறிது நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1 டேபிள் ஸ்பூன் மல்லி, 1 டீஸ்பூன் மிளகு, 1/4
டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் கடுகு சேர்த்து சிறிது நேரம் வறுக்க
வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 2
கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து, கீரை நன்கு சுருண்டு வரும் வரை
வதக்கி இறக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள புளியை நீருடன் சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் வதக்கி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகத்தை சேர்த்து தாளிக்க
வேண்டும். ஒருவேளை தாளிப்பு வடகம் இல்லாவிட்டால், 1/2 டீஸ்பூன் கடுகு
மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அதிகமாக நீரை
ஊற்றிவிடாமல் சிறிது நீரை ஜாரில் ஊற்றி அலசி ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* துவையலில் இருந்து நீர் வற்றி, அதன் நிறம் மாறத் தொடங்கியதும்,
அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான முருங்கைக்கீரை துவையல் தயார்.



Click it and Unblock the Notifications











