Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
தோசைக்கு ஒருடைம் பாம்பே குருமாவை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Bombay Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் செய்யும் இட்லி தோசைக்கு பெரும்பாலும் சட்னியை தான் செய்வீர்களா? சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று ஊற்றி சாப்பிடுமாறு ஏதாவது செய்ய நினைக்கிறீர்களா? வீட்டில் கடலை மாவு இருந்தால், அதைக் கொண்டு பாம்பே குருமாவை செய்யுங்கள்.
இந்த பாம்பே குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த குருமா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு பாம்பே குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாம்பே குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 2 ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (உடைத்தது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைககேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* புதினா இலைகள் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய்,
கிராம்பு, கல்பாசி, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய வெக்ாயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புதினா இலைகள், கொத்தமல்லி இலைகளை சிறிது சேர்த்து
நன்கு 1 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
* அடுத்து கடலை மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் ஒரு கப் நீர்
சேர்த்து கட்டிகளின்றி கரைத்துக் கொண்டு, வாணலியில் சேர்த்து கிளறி,
2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பாம்பே குருமா
தயார்.



Click it and Unblock the Notifications











