Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
1 பீட்ரூட்டும், பன்னீரும் இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. இதுக்கு சைடு டிஷ்ஷே தேவைப்படாது...
Beetroot Paneer Chapati Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? இதை விட்டால் சப்பாத்தி செய்வீர்களா? அப்படியானால் வெறும் சப்பாத்தியை எப்போதும் செய்வதற்கு பதிலாக, வீட்டில் பீட்ரூட்டும், பன்னீரும் இருந்தா இந்த சப்பாத்தியை செய்யுங்கள்.
இந்த பீட்ரூட் பன்னீர் சப்பாத்திக்கு சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது. முக்கியமாக பள்ளிக்கு மதிய உணவாக கொடுத்தும் விடலாம். இந்த சப்பாத்தி நீண்ட நேரம் மென்மையாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது சத்தானதும் கூட.

உங்களுக்கு பீட்ரூட் பன்னீர் சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பன்னீர் சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1/2 கிலோ
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* பெரிய பீட்ரூட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - 1/4 கட்டு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - சிறிது
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவைப்பட்டால்
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த மாவுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள்,
ஓமம் சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துருவிய பன்னீர், பீட்ரூட் மற்றும் பொடியாக நறுக்கிய
கொத்தமல்லியை சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நீர் ஊற்றாமல் கைகளால்
நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு சற்று இறுக்கமாக பிசைய வேண்டும்.
* தேவைப்பட்டால் மட்டும் நீரை லேசாக தெளித்து பிசைய வேண்டும்.
* பின் பிசைந்த மாவை 15 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று
மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை ஒவ்வொன்றாக சேர்த்து, நெய் ஊற்றி,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பீட்ரூட் பன்னீர் சப்பாத்தி
தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications









