Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
1 பீட்ரூட்டும், பன்னீரும் இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. இதுக்கு சைடு டிஷ்ஷே தேவைப்படாது...
Beetroot Paneer Chapati Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? இதை விட்டால் சப்பாத்தி செய்வீர்களா? அப்படியானால் வெறும் சப்பாத்தியை எப்போதும் செய்வதற்கு பதிலாக, வீட்டில் பீட்ரூட்டும், பன்னீரும் இருந்தா இந்த சப்பாத்தியை செய்யுங்கள்.
இந்த பீட்ரூட் பன்னீர் சப்பாத்திக்கு சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது. முக்கியமாக பள்ளிக்கு மதிய உணவாக கொடுத்தும் விடலாம். இந்த சப்பாத்தி நீண்ட நேரம் மென்மையாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது சத்தானதும் கூட.

உங்களுக்கு பீட்ரூட் பன்னீர் சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பன்னீர் சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1/2 கிலோ
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* பெரிய பீட்ரூட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - 1/4 கட்டு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - சிறிது
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவைப்பட்டால்
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த மாவுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள்,
ஓமம் சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துருவிய பன்னீர், பீட்ரூட் மற்றும் பொடியாக நறுக்கிய
கொத்தமல்லியை சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நீர் ஊற்றாமல் கைகளால்
நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு சற்று இறுக்கமாக பிசைய வேண்டும்.
* தேவைப்பட்டால் மட்டும் நீரை லேசாக தெளித்து பிசைய வேண்டும்.
* பின் பிசைந்த மாவை 15 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று
மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை ஒவ்வொன்றாக சேர்த்து, நெய் ஊற்றி,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பீட்ரூட் பன்னீர் சப்பாத்தி
தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications






