Latest Updates
-
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா?
சிம்பிளான... பேச்சுலர் சாம்பார்
மிகவும் சிம்பிளான, அதே வேளையில் மிகவும் ருசியான ஒரு சைடு டிஷ்ஷை இட்லி, தோசைக்கு செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சாம்பார் செய்யுங்கள். அதுவும் பருப்பு இல்லாத சாம்பார் செய்யுங்கள்.
வீட்டில் செய்யும் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னியை செய்து போரடித்துவிட்டதா? மிகவும் சிம்பிளான, அதே வேளையில் மிகவும் ருசியான ஒரு சைடு டிஷ்ஷை இட்லி, தோசைக்கு செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சாம்பார் செய்யுங்கள். அதுவும் பருப்பு இல்லாத சாம்பார் செய்யுங்கள். இந்த சாம்பாருக்கு பேச்சுலர் சாம்பார் என்று பெயர். பொதுவாக இம்மாதிரியான சாம்பார் பேச்சுலர்களுக்கு ஏற்றது. ஆனால் இதை ஒரு அவசரத்திற்கும் செய்யலாம்.

உங்களுக்கு பேச்சுலர் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பேச்சுலர் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* சாம்பார் பவுடர் - 2-3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம்/சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பையும் தூவி நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, சாம்பார் பவுடரை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சர்க்கரை சேர்த்து மூடி வைத்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பேச்சுலர் சாம்பார் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications