Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
தோசைக்கு மாவு அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரையுங்க... தோசை மல்லிகைப்பூ மாதிரி மென்மையா இருக்கும்!
Aval Dosa Recipe in Tamil: தோசை நமது பிரதான உணவுகளில் ஒன்றாகும். காலையோ அல்லது மாலையோ நிச்சயம் வாரத்திற்கு 3 முறையாவது நாம் தோசை சாப்பிட்டு விடுவோம். சிலர் வாரம் முழுக்கவே தோசை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். தோசைகள் பொதுவாக புளித்த அரிசி மற்றும் பருப்பு மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, ஆனால் சில வகையான தோசைகளை நாம் உடனடியாக தயாரிக்கலாம்.
அந்த வகையில் மிகவும் எளிமையான மற்றும் சுவையான ஒரு தோசைதான் அவல் தோசை. இந்த அவல் தோசை காலை அல்லது இரவு உணவிற்கு ஏற்றது. இந்த தோசையை பிளைன் தோசையாக சாப்பிடலாம் அல்லது பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து அடையாகவும் செய்து சாப்பிடலாம். இந்த மென்மையான பூ போன்ற தோசையை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 கப் அரிசி
- கால் கப் உளுந்தம் பருப்பு
- 1 கப் அவல்
- அரை கப் தயிர்
- உப்பு தேவைக்கேற்ப
- தண்ணீர் தேவைக்கேற்ற
- எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
- அவல் தோசை செய்யத் தொடங்குவதற்கு, அரிசி, உளுந்தம் பருப்பை தனித்தனியாக நீரில் கழுவவும்.
- பின்னர் இதை போதுமான தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அவலை அரை கப் தயிரில் சுமார் 45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு நன்கு ஊறியதும், அரிசியை சிறிது தண்ணீர் சேர்த்து, ஊறவைத்த அவல் மற்றும் தயிருடன் சேர்த்து, மென்மையான மற்றும் அடர்த்தியான மாவாக அரைக்கவும். இந்த மாவை ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றவும்.
- அடுத்து உளுந்தம்பருப்பை மென்மையான மற்றும் அடர்த்தியான மாவு தயாரிக்க போதுமான தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இந்த மாவை அரிசி மற்றும் அவல் கலவையில் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் பாத்திரத்தை மூடி, அவல் தோசை மாவை ஒரு சூடான இடத்தில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.
- புளித்த பிறகு, மாவை நன்கு கிளறி, தோசை ஊற்றலாம். குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
- பின்னர் வழக்கம் போல தோசை ஊற்றுவது போல இதனை தோசைக்கல்லில் ஊற்றலாம். எண்ணெய்க்குப் பதிலாக நெய் பயன்படுத்தி ஊற்றினால் சுவை கூடுதலாக இருக்கும்.
- இந்த தோசை வழக்கமான தோசை போல இல்லாமல் மென்மையாக பூ போல இருக்கும்.
- இந்த தோசைக்கு காரமான தக்காளி அல்லது தேங்காய் சட்னி சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











