Latest Updates
-
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா சிக்கன் கோலா உருண்டை
Andhra Chicken Kola Urundai: இன்று விடுமுறை என்பதால் பலரும் வீடுகளில் சிக்கன், மட்டன் என்று வாங்கி, அதை பலவிதமாக சமைத்து சாப்பிடுவோம். நீங்கள் இந்த வாரம் ஒரு வித்தியாசமான ரெசிபியை வீட்டில் முயற்சிக்க நினைத்தால், ஆந்திரா சிக்கன் கோலா உருண்டை செய்யுங்கள்.
இந்த சிக்கன் கோலா உருண்டையை மதிய வேளையில் சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். உங்களுக்கு ஆந்திரா சிக்கன் கோலா உருண்டை ரெசிபியை எப்படி வீட்டில் செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே ஆந்திரா சிக்கன் கோலா உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* வரமிளகாய் - 3
* பூண்டு - 15 பல்
* இஞ்சி - 3 இன்ச்
* கொத்தமல்லி - சிறு கட்டு (பொடியாக நறுக்கியது)
* மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 இன்ச்
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 5-6
* முந்திரி - 20
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மல்லி விதை, ஏலக்காய், கிராம்பு,
பட்டை, வரமிளகாய் மற்றும் முந்திரி சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வரமிளகாய்
மற்றும் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், கொத்தமல்லி, சிக்கன் மற்றும் உப்பு
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த கலவையில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரட்டிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், உருண்டைகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து
பொரித்து எடுத்தால், சுவையான ஆந்திரா சிக்கன் கோலா உருண்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications