Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
காரசாரமான மற்றும் கலர்புல்லான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிபில்.... இந்த சண்டே இதை செஞ்சு அசத்துங்க...!
Andhra Chicken Gravy Recipe in Tamil: ஆந்திரா என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது காரசாரமான உணவுகள்தான். பொதுவாக ஆந்திராவின் மிகவும் பிரபலமான உணவென்றால் ஹைதராபாத் பிரியாணிதான். ஆனால் ஹைதராபாத் பிரியாணி மட்டுமின்றி ஆந்திராவில் பல தனித்துவமான அசைவ உணவு வகைகள் உள்ளது. சிக்கனை ஆந்திர மக்கள் பல வழிகளில் சுவையாக சமைக்கிறார்கள்.
ஆந்திரா சிக்கன் குழம்பு என்பது கலர்புல்லான மற்றும் காரசாரமான சிக்கன் குழம்பாகும். இது இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு மட்டுமின்றி சாதத்துக்கு சூப்பராக இருக்கும். இந்த வார ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கமான சிக்கன் கிரேவி செய்யாமல் இந்த ஆந்திரா சிக்கன் கிரேவி செஞ்சா வீட்ல எல்லாரும் அசந்துருவாங்க. இந்த பதிவில் காரசாரமான ஆந்திர சிக்கன் கிரேவியை எப்படி செய்யலாமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- சிக்கன் - அரை கிலோ
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- சோம்பு - 2 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 துண்டு
- சீரகம் - 1 ஸ்பூன்
- ஏலக்காய் - 4
- கிராம்பு - 4
- பிரியாணி இலை - 1
- பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ப
- வெண்ணெய் - 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு பொடியாக நறுக்கியது
செய்முறை:
- சிக்கனை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள
வேண்டும்.
- அதன்பின் சிக்கனில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலாப்பொடிகள்,
இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள்
சிக்கனை ஊறவைக்கவும்.
- சிக்கன் நன்கு ஊறியதும், ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி நன்கு காய
விடவும்.
- எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும்
பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும், அதன்பின் கறிவேப்பிலையை அதில்
போடவும்.
- பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் ஊறவைத்த சிக்கனை போட்டு நன்கு
கிளறவும்.
- அதன்பின் ஒரு மூடிபோட்டு அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம்
நன்கு.வேகவைக்கவும்
- சிக்கன் இப்போது நன்கு தண்ணீர் விட்டிருக்கும். இப்போது நன்கு கிளறி
அதில் கரம் மசாலா தூளை சேர்க்கவும் .
- சிக்கன் நன்கு வெந்து கொதி வந்ததும் அதில் வெண்ணெய் மற்றும்
கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கிளறவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து ருசி பார்த்து இப்போது அடுப்பை
அணைக்கவும்.
- சூடான சுவையான ஆந்திரா சிக்கன் கிரேவி ரெடி... இதை சாதத்துடன்
பரிமாறவும்...!



Click it and Unblock the Notifications











