Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
ஆடி அமாவாசை ஸ்பெஷலா.. அடுப்பே இல்லாம பாயாசம் செய்யலாம் தெரியுமா?- எப்படின்னு பாருங்க...
Aadi Amavasai 2024 Special Coconut Milk Payasam Without Fire: இன்று ஆடி அமாவாசை என்பதால் பலரது வீடுகளில் வடை பாயாசத்துடன் சமையல் செய்து, முன்னோர்களுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். நீங்கள் உங்கள் வீட்டில் பாயாசம் செய்வதாக இருந்தால் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா?
சற்று வித்தியாசமான சுவையில் பாசாயம் செய்து கொடுக்க உங்கள் வீட்டில் உள்ளோர் கேட்கிறார்களா? அப்படியானால் தேங்காய் பால் பாயாசம் செய்யுங்கள். அதுவும் அடுப்பே இல்லாமல் சூப்பரான சுவையில் பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இது சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சியும் கூட.

உங்களுக்கு அடுப்பே இல்லாமல் பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அடுப்பு பயன்படுத்தாமல் எப்படி பாயாசம் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாதாம் பிசின் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்
* பாதாம் - 15
* முந்திரி - 15
* தேங்காய் - 1
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* பாதாம், முந்திரி, பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினை
எடுத்து, அத்துடன் 2 டம்ளர் நீரை ஊற்றி, குறைந்தது 5 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாதாம் மற்றும் முந்திரியை சுடுநீரில் போட்டு 2 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்த பாதாமின் தோலை நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு,
ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு முழு தேங்காயை எடுத்து, அதை அரைத்து தேங்காய் பால்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த பாதாம் பிசினை எடுத்து, அத்துடன்
தேங்காய் பாலை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பாதாம், முந்திரியை சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் சர்க்கரையை சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன்
உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி,
பிஸ்தாவை சேர்த்து நன்கு கலந்தால், சுவையான பாயாசம் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications









