Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
ஆடி அமாவாசை ஸ்பெஷலா.. அடுப்பே இல்லாம பாயாசம் செய்யலாம் தெரியுமா?- எப்படின்னு பாருங்க...
Aadi Amavasai 2024 Special Coconut Milk Payasam Without Fire: இன்று ஆடி அமாவாசை என்பதால் பலரது வீடுகளில் வடை பாயாசத்துடன் சமையல் செய்து, முன்னோர்களுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். நீங்கள் உங்கள் வீட்டில் பாயாசம் செய்வதாக இருந்தால் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா?
சற்று வித்தியாசமான சுவையில் பாசாயம் செய்து கொடுக்க உங்கள் வீட்டில் உள்ளோர் கேட்கிறார்களா? அப்படியானால் தேங்காய் பால் பாயாசம் செய்யுங்கள். அதுவும் அடுப்பே இல்லாமல் சூப்பரான சுவையில் பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இது சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சியும் கூட.

உங்களுக்கு அடுப்பே இல்லாமல் பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அடுப்பு பயன்படுத்தாமல் எப்படி பாயாசம் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாதாம் பிசின் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்
* பாதாம் - 15
* முந்திரி - 15
* தேங்காய் - 1
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* பாதாம், முந்திரி, பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினை
எடுத்து, அத்துடன் 2 டம்ளர் நீரை ஊற்றி, குறைந்தது 5 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாதாம் மற்றும் முந்திரியை சுடுநீரில் போட்டு 2 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்த பாதாமின் தோலை நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு,
ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு முழு தேங்காயை எடுத்து, அதை அரைத்து தேங்காய் பால்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த பாதாம் பிசினை எடுத்து, அத்துடன்
தேங்காய் பாலை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பாதாம், முந்திரியை சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் சர்க்கரையை சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன்
உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி,
பிஸ்தாவை சேர்த்து நன்கு கலந்தால், சுவையான பாயாசம் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications