Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
அந்த காலத்தில் பெண்கள் யோனியை வைத்து மேற்கொள்ளப்பட்ட வினோதமான கர்ப்ப பரிசோதனைகள் என்னென்ன தெரியுமா?
கர்ப்பத்திற்கு பரிசோதிக்கப்பட வேண்டிய பெண்களின் சிறுநீரில் மதுவைச் சேர்ப்பது மற்றும் ஆல்கஹால் அதற்கு எதிர்வினையாற்றுகிறதா என்று பார்த்து, அந்த பெண் கர்ப்பமாக?
விஞ்ஞானம் மற்றும் அறிவியல் வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்பது கடந்த காலத்தில் இந்த வாளர்ச்சிகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் தெரியும். இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் வளர்ச்சியை குறை கூறிக்கொண்டு இருக்கிறார்கள். குறைகூறுபவர்கள் முதலில் இக்கட்டுரையை வாசிக்கவும். நாம் அனைவரும் ஒரு நிமிடம் எடுத்து விஞ்ஞான வளர்ச்சிக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் நீங்கள் படிக்கப் போவது உங்கள் மனதை வெறுமனே கடந்துபோகும் விஷயம் அல்ல.

பொதுவாக பண்டைய காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள்தான். இன்றைய நவீன காலத்திலும் பெண்கள்தான் அதிகம் பாதிப்படைகிறார்கள். கர்ப்பகாலத்திற்கான நோயறிதல் கருவிகள் இல்லாத பழைய காலங்களில், மக்கள் அதைச் சரிபார்க்க மிகப்பெரிய தவறுகளை செய்திருக்கிறார்கள். பண்டைய காலங்களில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? இல்லையா? எனத் தெரிந்து கொள்ள நம் அறிவாளிகளான முட்டாள் முன்னோர்கள் செய்த விஷயங்களை இக்கட்டுரையில் காணலாம்.

பூண்டு மற்றும் வெங்காயம் சோதனை
எகிப்தியர்கள் பேய்களை விரட்டுவதில் திறமையானவர்கள் என்பது தெரியும். ஆனால் பண்டைய எகிப்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தாரா? இல்லையா? என்பதை அவர்களால் எப்படி சொல்ல முடிந்தது. இரவு முழுவதும் பூண்டு அல்லது வெங்காயத்தை பரிசிசோதனைக்கு உட்படுத்தபடும் பெண்ணின் யோனிக்குள் வைக்கப்படும். காலையில், அந்த பெண்ணின் சுவாசத்தில் பூண்டு மற்றும் வெங்காயம் வாசனை வீசுகிறது என்றால், அவள் கர்ப்பமாக இல்லை. சுவாச வாசனை இல்லையென்றால், அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறாள். ஏனெனில் குழந்தை வாசனைக்கு பூண்டு, வெங்காயம் வாசனை மேல்நோக்கி பயணிப்பதைத் தடுக்கிறது என்று நம்பப்படுகிறது.

கண் பரிசோதனை
16 ஆம் நூற்றாண்டில், மருத்துவர் ஜாக் கில்லெமியோ ஒரு பெண்ணின் கண்களை பார்த்து கர்ப்பமாக இருக்கிறளா? இல்லையா? என்று சொல்ல முடியும் என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை, அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தால், அவள் ஆழமான கண்களுடன் இருப்பாள். மேலும், அவள் கண் இமைகள் குறைந்து அவள் கண்களின் மூலையில் வீங்கிய நரம்புகளை உருவாக்கின. இந்த விஷயங்களை வைத்து ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிவிப்பார்களாம்.

கோதுமை மற்றும் பார்லி சோதனை
கோதுமை மற்றும் பார்லி இரண்டு பயிர்களை வைத்து கர்ப்ப பரிசோதனை பண்டைய காலத்தில் செய்யப்பட்டது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா? என்பதை பரிசோதனை செய்ய, இந்த இரண்டு தானியங்களையும் கொண்ட ஒரு பையில் சிறுநீர் கழிக்கும்படி அந்த பெண்ணிடம் கேட்கப்பட்டது. அதன் பிறகு, அதில் பார்லி முளைத்தால், வயிற்றில் இருக்கும் சிசு பையனாக இருக்கும், கோதுமை முளைத்தால், அது ஒரு பெண்ணாக இருக்கும். அப்படி ஏதும் முளைக்கவில்லை இல்லையென்றால், அவள் கர்ப்பமாக இல்லை என்று கூறப்பட்டது.

தாழ்ப்பாள் சோதனை
இது கதவுகளின் தாழ்ப்பாளைப் பயன்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது. ஏனெனில் 15 ஆம் நூற்றாண்டின் எல்லோரும் தங்கள் பாரம்பரிய பயன்பாட்டை அதிகம் விரும்புவதாகத் தெரியவில்லை. இந்த முறையில், பெண்கள் தாழ்ப்பாளை கைவிடப்பட்ட ஒரு படுகையில் சிறுநீர் கழிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு, தாழ்ப்பாளை ஒரு அடையாளத்தை விட்டுவிட்டால், அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், இல்லையெனில் கர்ப்பமாக இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.

சிறுநீர் தீர்க்கதரிசிகள்
நோயாளியின் சிறுநீரை பரிசோதித்து நோய்களைக் கண்டறியும் நபர் சிறுநீர் தீர்க்கதரிசிகள் என்றழைக்கப்படுகின்றனர். இந்த பட்டியலில் மிகச் சிறந்ததாக முடிசூட்டப்பட வேண்டிய முறை இங்கே வருகிறது. கர்ப்பத்திற்கு பரிசோதிக்கப்பட வேண்டிய பெண்களின் சிறுநீரில் மதுவைச் சேர்ப்பது மற்றும் ஆல்கஹால் அதற்கு எதிர்வினையாற்றுகிறதா என்று பார்த்து, அந்த பெண் கர்ப்பமாக? இல்லையா? என்பதை விளக்குவார்கள் புத்திசாலித்தனமான ஆண்கள்.

தாய்ப்பால் சோதனை
சிறுநீரக தீர்க்கதரிசி சோதனை பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால், இது நிச்சயமாக ஆறுதலடைய செய்யும். இங்கே, ஒரு மகனைப் பெற்றெடுத்த தாயின் தாய்ப்பாலை பரிசோதனைகு உட்படுத்த வேண்டிய பெண் குடிக்க வேண்டும். அதன்பிறகு அவள் வாந்தி எடுத்தால், அவளுடைய கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. இல்லையெனில், அவள் கர்ப்பம் இல்லை.

வண்ண சோதனை
வண்ண சோதனை விஞ்ஞான ஆதரவைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்ப்பம் முன்னேறி ஆறாவது வாரத்தை எட்டும்போது, பெண்ணின் அந்தரங்க பகுதிகள் நிறத்தை மாற்றி, ஒரு ஊதா / நீல நிறத்தை எடுத்துக்கொள்கின்றன என்று பலர் நம்பினர். இது உண்மையில் உண்மை, ஏனென்றால் கர்ப்பம் முன்னேறும்போது, கீழ் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இருப்பினும், ஒரு விவேகமான, பழைய மருத்துவர் 1830 களில் உங்கள் அந்தரங்கங்களை சோதித்துப் பாருங்கள் என்று அப்போதே கூறியிருந்தார்.

கோல்கேட் சோதனை
கோல்கேட் சோதனைகள் பண்டைய காலத்தைச் சேர்ந்தவை என்று நீங்கள் நினைத்திருந்தால், அது தவறானது. ஏனெனில் இந்த சோதனை மிகச் சமீபத்தியது. இந்த சோதனையில் ஒரு கிண்ணத்தில் கோல்கேடை நிறைத்து வைத்திருப்பார்கள். அந்த கிண்ணத்தில் பெண்கள் சிறுநீர் கழிப்பார்கள். அந்த பேஸ்ட் நுரையாக மாறினால், அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது.



Click it and Unblock the Notifications