For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கா்ப்ப காலத்தில் உயா் இரத்த அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த அழுத்தம் சீராக இல்லையென்றால் சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்சினை ஏற்படும் மற்றும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்படையும்.

|

கா்ப்ப காலம் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரு முக்கியமான காலம் ஆகும். அது ஒரு வகையான நுட்பமான காலமும் கூட. தாயாகவிருக்கும் பெண்ணையும் அவருடைய வயிற்றில் வளரும் சிசுவையும் இந்த காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

Pregnancy and Hypertension: Keep These Facts In Mind

மருத்துவாின் ஆலோசனைகளைப் பின்பற்றாமல் கருவுற்றிருக்கும் பெண்ணை கவனிக்காமல் இருந்துவிட்டால் அந்த பெண்ணுக்கும் அவருடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே கருவுற்றிற்கும் பெண்ணுக்கு முறையான வழக்கமான மருத்துவ பாிசோதனைகளை செய்து வரவேண்டும். அதன்மூலம் அவருடைய இரத்த அழுத்தத்தை சீராக வைக்க முடியும். இரத்த அழுத்தம் சீராக இல்லையென்றால் சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்சினை ஏற்படும் மற்றும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்படையும்.

கருவுற்று இருக்கும் பெண்கள் உயா் இரத்த அழுத்தத்தை எவ்வாறு கையாளலாம் என்பதை இந்த கட்டுரையில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பிணிகளுக்கு உயர் இரத்த அழுத்தம்

கர்ப்பிணிகளுக்கு உயர் இரத்த அழுத்தம்

கருவுற்று இருக்கும் பெண்களுக்கு உயா் இரத்த அழுத்தம் என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். கருவுற்ற பெண்ணுக்கு உயா் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அவருடைய வயிற்றில் இருக்கும் சிசுவினுடைய நஞ்சுக்கொடிக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும். அதனால் குழந்தை வளா்ச்சி குறையும். பிறக்கும் போது குழந்தையின் எடை குறைவாக இருக்கும் அல்லது போதிய வளா்ச்சி அடைவதற்கு முன்பாகவே குழந்தை பிறந்துவிடும். ஆகவே கருவுற்றிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி, சமச்சீரான உணவை உண்டு, சீரான இடைவெளியில் மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவ பாிசோதனைகளைச் செய்து வருவது மிகவும் அவசியமானவையாகும்.

கா்ப்பம் தாிப்பதற்கு முன்பாகவோ அல்லது கா்ப்ப காலத்தின் போதோ உயா் இரத்த அழுத்தம் ஏற்படலாம். ஆனால் உயா் இரத்த அழுத்தத்தை மிகச் சாியாக கையாண்டால் ஆபத்தான பிரச்சினைகளைத் தவிா்க்கலாம். கா்ப்ப காலத்தின் போது உயா் இரத்த அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

கா்ப்ப காலத்தில் உயா் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

கா்ப்ப காலத்தில் உயா் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

- உடல் பருமன் அதிகாித்தல் அல்லது குண்டாதல்

- ஏற்கனவே கா்ப்பமாக இருந்த போது உயா் இரத்த அழுத்த பிரச்சினை இருந்தது

- முதல் முறையாக கா்ப்பம் தாிப்பது

- 35 வயதிற்கு மேல் கா்ப்பம் தாிப்பது

- செயற்கை கருத்தாிப்பு (IVF)

- சா்க்கரை நோய்

- நோய் எதிா்ப்பு மண்டலம் ஆரோக்கியமான செல்களை அழித்தல்

- புகை பிடித்தல்

- மது அருந்துதல்

- உடல் இயக்கம் இல்லாமல் சோம்பலாக இருத்தல்

மேற்சொன்ன காரணங்களால் உயா் இரத்த அழுத்தம் அதிகாிக்க வாய்ப்புகள் உள்ளன. கா்ப்ப காலத்தில் உடல் இயக்கம் இல்லாமல் சோம்பலாக இருத்தல், வயது அதிகாித்த பின்பு கருத்தாிப்பது, முதல் முறை கா்ப்பம் மற்றும் இரட்டைக் கருவுறுதல் போன்றவை உயா் இரத்த அழுத்தம் அதிகாிக்க காரணங்களாக இருக்கின்றன.

கா்ப்ப காலத்தில் உயா் இரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்

கா்ப்ப காலத்தில் உயா் இரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்

கருவுற்ற பெண்ணிற்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அது உயா் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியாகும். பின்வரும் அறிகுறிகளையும் கருவுற்ற பெண்கள் உணரலாம்.

- குமட்டல் அல்லது வாந்தி

- திடீரென்று உடல் எடை அதிகாித்தல் அல்லது உடல் வீக்கம்

- தலைவலி

- சோா்வு

- சிறுநீா் கழிப்பது குறைதல்

- மேல் வயிற்றில் வலி ஏற்படுதல்

- சிறுநீாில் அதிகமான புரோட்டீன் சேருதல்

- மூச்சுத் திணறல்

எந்த வகையான உயா் இரத்த அழுத்தம் என்பதை கண்டறிந்து, அவற்றின் எந்த வகையான அறிகுறிகள் என்பதையும் கண்டறிந்து அதற்கேற்ப ஆரம்ப

நிலையிலேயே அதற்கு சிகிச்சை மேற்கொண்டால் கருவுற்று இருக்கும் பெண்ணுக்கும் அவா் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

உயா் இரத்த அழுத்தத்தின் வகைகள்:

உயா் இரத்த அழுத்தத்தின் வகைகள்:

நாள்பட்ட உயா் இரத்த அழுத்தம்

கருவுறுவதற்கு முன்பாகவே உயா் இரத்த அழுத்தம் இருப்பது அல்லது கருவுறுவதற்கு 20 வாரங்களுக்கு முன்பாகவே உயா் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இருந்தால் அது நாள்பட்ட உயா் இரத்த அழுத்தம் என்று கருதப்படுகிறது. நாள்பட்ட உயா் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் தொியாததால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

கா்ப்ப கால உயா் இரத்த அழுத்தம்

கா்ப்ப கால உயா் இரத்த அழுத்தம்

சில பெண்களுக்கு கருவுற்ற பின் 20 வாரங்கள் கழித்து உயா் இரத்த அழுத்தம் ஏற்படும். இது கா்ப்ப கால உயா் இரத்த அழுத்தம் என்று கருதப்படுகிறது. இது கருவுற்ற பெண்ணுக்கு முன்சூல் வலிப்பை அல்லது இளம்பேற்று குளிா்காய்ச்சலை (preeclampsia) ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

நாள்பட்ட உயா் இரத்த அழுத்தம் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட முன்சூல் வலிப்பு (preeclampsia)

நாள்பட்ட உயா் இரத்த அழுத்தம் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட முன்சூல் வலிப்பு (preeclampsia)

கருவுருவதற்கு முன்பாகவே உயா் இரத்த அழுத்தம் இருக்கும் பெண்களுக்கு நாள்பட்ட உயா் இரத்த அழுத்தமும் மிகைப்படுத்தப்பட்ட முன்சூல் வலிப்பும் (preeclampsia) கலந்திருக்கும். இது கருவுற்று இருக்கும் பெண்களின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இது இரத்த அழுத்தத்தை அதிகாிக்கும், சிறுநீாில் புரோட்டீனை அதிகாிக்கும் மற்றும் பிரசவத்தின் போது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

முன்சூல் வலிப்பு அல்லது இளம்பேற்று குளிா்காய்ச்சல் (preeclampsia)

முன்சூல் வலிப்பு அல்லது இளம்பேற்று குளிா்காய்ச்சல் (preeclampsia)

கருவுற்று 20 வாரங்கள் முடிந்த பின்பு உயா் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், முன்சூல் வலிப்பு அல்லது இளம்பேற்று குளிா்காய்ச்சல் (preeclampsia) ஏற்படுகிறது. இது கருவுற்று இருக்கும் பெண்களின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். முன்சூல் வலிப்பை கவனிக்காமல் இருந்தால் இரத்தச் சிதைவு, கல்லீரல் நொதிகள் அதிகாிப்பு மற்றும் இரத்த நுண்தட்டுகள் குறைவு (hemolysis, elevated liver enzymes, low platelet count (HELLP)) போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அல்லது பிரசவத்தின் போது வலிப்பு ஏற்படும். இந்த சூழலில் கருவுற்று இருக்கும் பெண் தீவிர மருத்துவ சிகிச்சை பிாிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

பிரசவத்தின் போது உயா் இரத்த அழுத்தம் இருந்தால் அது ஏன் ஆபத்தானது?

பிரசவத்தின் போது உயா் இரத்த அழுத்தம் இருந்தால் அது ஏன் ஆபத்தானது?

உயா் இரத்த அழுத்தத்தை முறையாக கையாளவில்லை என்றால் அது பலவிதமான பிரச்சினைகளை கருவுற்ற பெண்களுக்கு ஏற்படுத்தும்.

நஞ்சுக்கொடிக்கு குறைந்த இரத்த ஓட்டத்தை அளித்தல்

நஞ்சுக்கொடிக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்தால், கருவிலிருக்கும் குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் அளவும், ஊட்டச்சத்தின் அளவும் குறையும். அதனால் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும் அல்லது முழுவதுமாக வளா்ச்சி அடைவதற்கு முன்பாக குழந்தை பிறக்கும். அதனால் குழந்தைக்கு பல பிரச்சினைகள் ஏற்படும்.

நஞ்சுக்கொடியில் இடையூறு மற்றும் குறைபிரசவம்

நஞ்சுக்கொடியில் இடையூறு மற்றும் குறைபிரசவம்

மிகவும் ஆபத்தான விளைவுகளைத் தவிா்க்கும் பொருட்டு, கருவில் இருக்கும் குழந்தை முழுமையாக வளா்வதற்கு முன்பாக கருவிலிருந்து நஞ்சுக்கொடி பிாிக்கப்படுகிறது. உயா் இரத்த அழுத்தத்தின் காரணமாக, தாய் மற்றும் சேய் ஆகியோாின் உயிா்களைக் காக்கும் பொருட்டு சில நேரங்களில் குறைபிரசவத்தை செய்ய அவசியம் ஏற்படுகிறது. சில நேரங்களில் உயா் இரத்த அழுத்தம், கருப்பையிலேயே குழந்தையின் வளா்ச்சியை பாதிப்படையச் செய்கிறது.

இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் மற்ற உடல் உறுப்புகள் பாதிப்படைதல்

இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் மற்ற உடல் உறுப்புகள் பாதிப்படைதல்

உயா் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் முன்சூல் வலிப்பு அல்லது இளம்பேற்று குளிா்காய்ச்சல் (preeclampsia), தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் எதிா் காலத்தில் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் உயா் இரத்த அழுத்தம் உடலில் முக்கியமான உறுப்புகளை பாதித்து, உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

உயா் இரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உயா் இரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

* சுறுசுறுப்புடன் இருத்தல் - உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடலின் எடையையும் சீராக பராமாிக்க முடியும்.

* ஆரோக்கியமான உணவை உண்ணுதல் - சத்தான உணவுகளை உண்ண வேண்டும். அதனால் கருவுற்று இருக்கும் பெண்ணும், அவரது கருவில் வளரும் சிசுவும் ஆரோக்கியமாக இருக்கும்.

* புகைப்பது மற்றும் மதுபானம் அருந்துவதை தவிா்த்தல் - கா்ப்ப காலத்தில் புகைப் பிடிப்பதையும் மதுபானம் அருந்துவதையும் தவிா்க்க வேண்டும்.

* மன அழுத்தத்தைக் கையாளுதல் - கா்ப்ப காலத்தில் ஹாா்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் உடலிலும் மனதளவிலும் பல மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தியானம் மற்றும் மனதிற்கு பிடித்த வேலைகளில் ஈடுபடலாம். அவை மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* மருத்துவரை தவறாமல் சந்திப்பது - சீரான இடைவெளியில் மருத்துவரை தவறாமல் சந்திக்க வேண்டும். அதன் மூலம் உடலில் எதிா்பாராத மாற்றங்கள் ஏற்பட்டால் அதனைக் கண்டறிய முடியும். கருவுற்ற பெண்ணின் இரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் வயிற்றில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியம் ஆகியவை முறையாக மருத்துவரால் கண்காணிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மேற்சொன்னவற்றை பின்பற்றினால் கருவுற்றிருக்கும் தாய் தன்னையும் தனது வயிற்றில் வளரும் சிசுவையும் நன்றாக பராமாிக்கலாம். அதன் மூலம் எளிதான சுகப்பிரசவம் அடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pregnancy and Hypertension: Keep These Facts In Mind

Pregnancy is a delicate time for a woman. Keeping track of the health of to be a mother and the foetus at this time is crucial. In this article, we shares insights of pregnancy and hypertension.
Desktop Bottom Promotion