Just In
- just now இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரலில் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 55 min ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 2 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
Don't Miss
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Movies அச்சச்சோ.. தளபதி விஜய்க்கு என்ன ஆச்சு.. கை விரலை கவனிச்சீங்களா?.. ஓட்டுப் போடும் போது சிக்கிடுச்சே!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனது கர்ப்பம் கலைந்தாலும் பரவாயில்லை என்று தன்னை நம்பி வந்த பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்!
பிரசவம் பார்க்கும் போது மருத்துவரின் கர்ப்பம் கலைந்தது
நமது உயிரை காப்பதால் மருத்துவரை தெய்வமாக மதிக்கிறோம். மருத்துவர்கள் அந்த தெய்வத்திற்கும் மேல் என நினைக்க வைத்திருக்கிறார் எகிப்து நாட்டை சேர்ந்த பெண் மகப்பேறு மருத்துவர் மேர்வாட் முகமது. அப்படி அவர் என்ன தான் செய்தார் என்பதை இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்பம் கலைந்தது
மேர்வாட் முகமது என்பவர் எகிப்து நாட்டில் உள்ள ஒரு பெண் மகப்பேறு மருத்துவர். இவர் கர்ப்பமாகவும் உள்ளார். இவர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது தீடீரென இவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பம் கலைந்து விட்டது.
உயிரை பொருட்படுத்தாத மருத்துவர்
இருப்பினும் இவர் தனது உயிரை பொருட்படுத்தாமல், அந்த பெண்ணின் பிரசவம் நல்லபடியாக முடியும் வரை உடன் இருந்துள்ளார். இவர் பிறந்த அந்த பச்சிளங்குழந்தையின் அரும்பு முகத்தை காணும் வரை பிரசவ அறையை விட்டு வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுளுக்கு மேல்!
பின்னர் மேர்வாட் முகமது தனி அறையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த மருத்துவரின் கடமை உணர்வை என்னவென்று சொல்லி பாராட்டுவது? இவர் கடவுளுக்கு மேல் என்று சொல்வதை விட வேறு ஒரு வார்த்தை கிடைக்கவில்லை.
வலியும் வேதனையும்!
வலிகளிலேயே மிகப்பெரிய வலி பிரசவ வலி தான். ஒரு பெண் தன்னால் பொருத்துக்கொள்ளக்கூடிய அளவைக்காட்டிலும் பிரசவத்தில் அதிக வலியை அனுபவிக்கிறாள். இதே போன்றது தான் கர்ப்பம் கலைந்த வலியும், பிரசவ வலியில் குழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் கலந்திருக்கிறது. ஆனால் கர்ப்பம் கலைந்த வலியில் மன வேதனை தான் அதிகரிக்கிறது.