Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தனது கர்ப்பம் கலைந்தாலும் பரவாயில்லை என்று தன்னை நம்பி வந்த பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்!
பிரசவம் பார்க்கும் போது மருத்துவரின் கர்ப்பம் கலைந்தது
நமது உயிரை காப்பதால் மருத்துவரை தெய்வமாக மதிக்கிறோம். மருத்துவர்கள் அந்த தெய்வத்திற்கும் மேல் என நினைக்க வைத்திருக்கிறார் எகிப்து நாட்டை சேர்ந்த பெண் மகப்பேறு மருத்துவர் மேர்வாட் முகமது. அப்படி அவர் என்ன தான் செய்தார் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

கர்ப்பம் கலைந்தது
மேர்வாட் முகமது என்பவர் எகிப்து நாட்டில் உள்ள ஒரு பெண் மகப்பேறு மருத்துவர். இவர் கர்ப்பமாகவும் உள்ளார். இவர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது தீடீரென இவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பம் கலைந்து விட்டது.

உயிரை பொருட்படுத்தாத மருத்துவர்
இருப்பினும் இவர் தனது உயிரை பொருட்படுத்தாமல், அந்த பெண்ணின் பிரசவம் நல்லபடியாக முடியும் வரை உடன் இருந்துள்ளார். இவர் பிறந்த அந்த பச்சிளங்குழந்தையின் அரும்பு முகத்தை காணும் வரை பிரசவ அறையை விட்டு வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளுக்கு மேல்!
பின்னர் மேர்வாட் முகமது தனி அறையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த மருத்துவரின் கடமை உணர்வை என்னவென்று சொல்லி பாராட்டுவது? இவர் கடவுளுக்கு மேல் என்று சொல்வதை விட வேறு ஒரு வார்த்தை கிடைக்கவில்லை.

வலியும் வேதனையும்!
வலிகளிலேயே மிகப்பெரிய வலி பிரசவ வலி தான். ஒரு பெண் தன்னால் பொருத்துக்கொள்ளக்கூடிய அளவைக்காட்டிலும் பிரசவத்தில் அதிக வலியை அனுபவிக்கிறாள். இதே போன்றது தான் கர்ப்பம் கலைந்த வலியும், பிரசவ வலியில் குழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் கலந்திருக்கிறது. ஆனால் கர்ப்பம் கலைந்த வலியில் மன வேதனை தான் அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications