Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?
கர்ப்பிணி பெண்கள் நவராத்திரி விரதம் இருக்கலாமா?
நவராத்திரி விரதத்தை கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்கும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
நவராத்திரி சிறிது நாட்களில் வரப்போகிறது. இந்த நாட்களில் பெண்கள் விரதம் இருந்து கடவுளை வழிபடுவார்கள். கர்ப்பிணி பெண்கள் விரதம் இருக்கலாமா என்பது விவாதத்திற்கு உரியது. பல மருத்துவ வல்லுநர்கள் கர்ப்பிணி பெண்கள் விரதம் இருப்பது கூடாது என்கிறார்கள்.
பெண்களின் கர்ப்பத்தின் முதல் பருவகாலம் மற்றும் முன்றாவது பருவகாலத்தில் நிச்சயமாக விரதம் இருக்க கூடாது. உங்களுக்கு விரதம் இருந்தே ஆக வேண்டும் என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படலாம்.

நவராத்திரி விரதம் :
நவராத்திரி விரதம் அவ்வளவு கடுமையானது அல்லது. இந்த விரத காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடலாம். நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் கர்ப்பகாலத்தில் இருப்பது தவறானது. நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்து தான் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் செல்கின்றன. எனவே கர்ப்பகாலத்தில் விரதம் இருப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.
நீங்கள் கட்டாயம் கர்ப்ப காலத்தில் விரதம் இருந்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால், இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தண்ணீர்
நீங்கள் விரத காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது உங்களையும், கருவில் உள்ள உங்கள் குழந்தையையும் பாதிக்கும். தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் வறட்சி ஏற்படும்.

மருத்துவரின் ஆலோசனை
மருத்துவரின் ஆலோசனை இன்றி கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டாம். சிலருக்கு பிரசவ காலம் எளிதானதாக இருக்கும். ஆனால் சிலருக்கு சற்று கடினமானதாக இருக்கும். கர்ப்பகாலத்தில் விரதம் இருப்பது கடினமானதாக இருந்தாலும், மருத்துவர் சரி என்று கூறினால் மட்டும் விரதம் இருக்கலாம்.

பசியில் இருந்து தப்பிக்க..
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சத்தான பழங்களை சாப்பிடுவது மிகவும் அவசியம். மிக நீண்ட நேரம் பசியுடன் இருப்பது வலிமையை குறைக்கும், இரத்தசோகை, அசிடிட்டி, தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். இது கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான உணவுகள்
நவராத்திரி சமயத்தில் அதிகமாக எண்ணெய்யில் செய்த பலகாரங்கள் மற்றும் அதிகமாக பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட கூடாது. ஆரோக்கியமான உணவுகளான, பால், பழங்கள் மற்றும் டிரை புரூட்ஸ், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இதன் மூலம் அசிடிட்டி வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

உப்பு இல்லாத விரதம்
சிலர் உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளாமல் விரதம் இருப்பார்கள். கர்ப்பிணி பெண்கள் நிச்சயமாக இதனை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளாமல் இருந்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. எனவே உப்பு இல்லாத விரதத்தை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கலாம்.

குறிப்பு :
விழாக்காலங்களை கொண்டாட நினைத்து, இது போன்ற விரதங்களை இருப்பது ஒருவேளை உங்களது உடல்நலனையும், குழந்தையும் உடல்நலனையும் பாதிக்கும்.



Click it and Unblock the Notifications