Just In
- 59 min ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கருவில் இருக்கும் குழந்தைக்கு பாடம் கற்று கொடுப்பது சரியா? அதன் விளைவு எப்படி இருக்கும்?
கருவில் இருக்கும் குழந்தையால் நாம் பேசுவதை கேட்க முடியுமா என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையுடன் பிறப்பதற்கு முன்பே பேச வேண்டும் என நிறைய பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். குழந்தையின் கருவறை 9 மாதத்திலேயே சில சத்தங்களை புரிந்து கொள்ள தொடங்கிவிடுகிறது என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
குழந்தையால் கருவறையில் இருக்கும் போதே, வித்தியாச வித்தியாசமான ஒலிகள் மற்றும் மனிதர்களின் குரல்களை வேறுப்படுத்தி அறிய முடிகிறதாம்.
ஒவ்வொரு விதமான ஒலிகளை கேட்கும் போதும் குழந்தையின் இதய துடிப்பானது அதற்கேற்ற வகையில் துடிக்கிறதாம்.
கேட்கும் திறன்
கருவில் இருக்கும் குழந்தைகளை பற்றிய இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, கருவில் இருக்கும் போது குழந்தகளுக்கு கேட்கும் திறன் இருப்பதோடு மட்டுமில்லாமல், மொழிகளின் வித்தியாசமும் தெரிகிறது. பிறந்த சில வருடங்களில் அந்த மொழியில் குழந்தை சிறந்து விளங்குகிறது.
கர்ப்ப கால உணர்வு
குழந்தை வயிற்றில் இருக்கும் போது கேட்கும் ஒலிகள் குழந்தையின் கேட்கும் திறனையும் மொழிகளை கற்கும் திறனையும் கர்ப்ப காலத்திலேயே மேம்படுத்துகிறது.
ஆய்வு
இது பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் எட்டு மாத கர்ப்பிணி பெண்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் வித்தியாசமான நிறைய ஒலிகள் ஒலிக்க விடப்பட்டன. தங்களது குழந்தை ஒலிக்கேற்ப அசைவு கொடுப்பதை அந்த பெண்களால் உணர முடிந்தது.
என்ன சத்தம் கேட்கும்
குழந்தை கருவில் இருக்கும் தாயின் உடலுக்குள் இருந்து வரும் ஒலிகள் குழந்தைக்கு கேட்கும். அதனுடன் சேர்த்து சில வெளிப்புற ஒலிகளும் குழந்தைக்கு கேட்கும்.
மொழிகளை கற்க உதவும்
குழந்தையின் கருவறைக்குள் கேட்கும் இந்த ஒலிகள், குழந்தைகள் எதிர் காலத்தில் மொழிகளை எளிதாக கற்க உதவுகிறது. சிலர் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பாடம் கற்பிக்கவும், பாடல்களை ஒலிக்க செய்யவும் முற்படுகின்றனர். இது குழந்தையின் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.