Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
கருவில் இருக்கும் குழந்தைக்கு பாடம் கற்று கொடுப்பது சரியா? அதன் விளைவு எப்படி இருக்கும்?
கருவில் இருக்கும் குழந்தையால் நாம் பேசுவதை கேட்க முடியுமா என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையுடன் பிறப்பதற்கு முன்பே பேச வேண்டும் என நிறைய பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். குழந்தையின் கருவறை 9 மாதத்திலேயே சில சத்தங்களை புரிந்து கொள்ள தொடங்கிவிடுகிறது என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
குழந்தையால் கருவறையில் இருக்கும் போதே, வித்தியாச வித்தியாசமான ஒலிகள் மற்றும் மனிதர்களின் குரல்களை வேறுப்படுத்தி அறிய முடிகிறதாம்.
ஒவ்வொரு விதமான ஒலிகளை கேட்கும் போதும் குழந்தையின் இதய துடிப்பானது அதற்கேற்ற வகையில் துடிக்கிறதாம்.

கேட்கும் திறன்
கருவில் இருக்கும் குழந்தைகளை பற்றிய இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, கருவில் இருக்கும் போது குழந்தகளுக்கு கேட்கும் திறன் இருப்பதோடு மட்டுமில்லாமல், மொழிகளின் வித்தியாசமும் தெரிகிறது. பிறந்த சில வருடங்களில் அந்த மொழியில் குழந்தை சிறந்து விளங்குகிறது.

கர்ப்ப கால உணர்வு
குழந்தை வயிற்றில் இருக்கும் போது கேட்கும் ஒலிகள் குழந்தையின் கேட்கும் திறனையும் மொழிகளை கற்கும் திறனையும் கர்ப்ப காலத்திலேயே மேம்படுத்துகிறது.

ஆய்வு
இது பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் எட்டு மாத கர்ப்பிணி பெண்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் வித்தியாசமான நிறைய ஒலிகள் ஒலிக்க விடப்பட்டன. தங்களது குழந்தை ஒலிக்கேற்ப அசைவு கொடுப்பதை அந்த பெண்களால் உணர முடிந்தது.

என்ன சத்தம் கேட்கும்
குழந்தை கருவில் இருக்கும் தாயின் உடலுக்குள் இருந்து வரும் ஒலிகள் குழந்தைக்கு கேட்கும். அதனுடன் சேர்த்து சில வெளிப்புற ஒலிகளும் குழந்தைக்கு கேட்கும்.

மொழிகளை கற்க உதவும்
குழந்தையின் கருவறைக்குள் கேட்கும் இந்த ஒலிகள், குழந்தைகள் எதிர் காலத்தில் மொழிகளை எளிதாக கற்க உதவுகிறது. சிலர் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பாடம் கற்பிக்கவும், பாடல்களை ஒலிக்க செய்யவும் முற்படுகின்றனர். இது குழந்தையின் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.



Click it and Unblock the Notifications