Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
பிரசவ வலியின் போது பெண்களின் உடலில் ஏற்படும் 8 விஷயங்கள்!
ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுப்பிறவி என்பார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை. பொதுவாக அவர்கள் எதிர்க்கொள்ளும் வலியின் அளவு மரணத்திற்கு இணையானது என்றெல்லாம் கூறுவார்கள்.
ஆனால், குழந்தையை ஈன்றெடுக்கும் அந்த தருணத்தில் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் எதிர் கொள்ளும் வலி என்பது உணர்ந்தால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்.
கருப்பையில் குழந்தை இறந்துவிட்டது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!
பெண்ணுறுப்பில் கிழிசல் ஏற்படுவதில் இருந்து, சில தர்மசங்கடமான சூழல்களையும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின் போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவை அனைத்தும் இயல்பு தான், இயற்கையால் தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆயினும், இவை வலி மிகுந்தவை என்பதை நாம் மறந்துவிட கூடாது.
யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது?
இனி, பிரசவத்தின் போது பெண்கள் எதிர்க்கொள்ளும் வலி மிகுந்த உண்மைகள் பற்றி பார்க்கலாம்...

உண்மை #1
பிரசவத்தின் போது, குழந்தையை வெளியேற்ற பெண்கள் அழுத்தம் தரும் போது, மலம், சிறுநீர் கலந்து வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளன. இதை அவர்களால் கட்டுபடுத்த முடியாது.

உண்மை #2
பிரசவத்தின் போது பெண்ணின் உடலில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. அப்போது "Ecchymosis" ஏற்பட வாய்ப்பிருக்கிறது. Ecchymosis என்பது, கர்ப்பிணி பெண்களின் கண்களை சுற்றி இருக்கும் இரத்த நாளங்கள் வெடிப்பது போன்ற உணர்வை தருவது ஆகும். இதனால் அவர்களுக்கு கண்களை சுற்றி நிறம் கருமையாக மாறும்.

உண்மை #3
இது இயற்கை தான். ஆம், பெண்களின் பிறப்புறுப்பு எலாஸ்டிக் போன்ற தன்மை உடையது. ஆயினும், பிரசவத்தின் போது அவர்களது பிறப்புறுப்பில் கிழிசல் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இது குழந்தையின் சுற்றளவை பொருத்தது ஆகும். 95% பெண்களுக்கு இந்த கிழிசல் உண்டாகிறது.

உண்மை #4
பிரசவத்தின் போது பெண்ணுறுப்பு, கருப்பை, கருப்பை வாய், ஆசன வாயு பகுதிகளில் கூட பெண்களுக்கு சேதம் / கிழிசல் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கிறதாம்.

உண்மை #5
மேலும், பிரசவத்தின் போது இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், இதனால் அடிக்கடி வாந்தி எடுக்கவும் செய்வார்கள்.

உண்மை #6
பிரசவத்தின் போது அதிகமாக இரத்தம் கசிதல் ஏற்படும். இது இயல்பு தான் என்றாலும். அப்பொது ஏற்படும் வலியை தாங்கிக் கொண்டு, குழந்தையை பெற்றெடுக்க மென்மேலும், அழுத்தம் கொடுப்பது மிகவும் வலி மிகுந்ததாகும்.

உண்மை #7
பிரசவித்த பிறகு சில பெண்களுக்கு இரத்தப்போக்கு நின்றுவிடும். சிலருக்கு நிற்காமல் போகும். இதற்கு 50:50 வாய்ப்புகள் இருக்கின்றன. இதை மருந்துகளின் மூலம் மருத்துவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள்.

உண்மை #8
பிரசவத்திற்கு பிறகு ஓரிரு மாதங்கள் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 40 நாளுக்கு ஒருமுறை என மாறலாம்.



Click it and Unblock the Notifications











