Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது!
ஆரோக்கியமான குழந்தையைப் பெற வேண்டுமா?

கர்ப்பிணிகள் கவனத்திற்கு...
1. கர்ப்பம் தரிக்கும் பெண் 16-18 வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் குழந்தையின் உருவம் உருவாகும். இந்த நேரத்தில் எந்த ஒரு நோயும் தாயை தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் கொடிய வைரஸ்-ஆல் தாய் தாக்கப்பட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி, இதயம் போன்றவை பாதிக்கக்கூடும்.
2. இந்த காலகட்டத்தில் கஷ்டமான வேலைகளையோ அல்லது நீண்ட தூரம் பயணமோ செய்யக் கூடாது. மேலும் அடிக்கடி உடலுறவு வைக்கக் கூடாது.
3. மேலும் இந்த நேரத்தில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதனால் குழந்தைக்கு எதாவது பிரச்சனை இருந்தால் அறிந்து குழந்தைக்கு எதுவும் ஏற்படாமல் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்.
4. இந்த நேரத்தில் ரத்த சோகைக்கான பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் தாய்க்கு இரத்த குறைபாடு இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எல்லா சோதனைகளையும் செய்வது நல்லது.
5. கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான டெஸ்ட் என்றால் அது ரத்தப் பிரிவு டெஸ்ட். ஏனெனில் தாய் மற்றும் சேய்க்கு ஆர்எச் பொருத்தமின்மை இருந்தால் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
6. மேலும் கர்ப்பிணிகள் அதிக உப்பு, அதிக சர்க்கரை, கொழுப்பு இருக்கும் உணவுகளை சாப்பிடவே கூடாது. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உண்பது மிகவும் அவசியம். அத்துடன் இரும்பு, கால்ஷியம் இருக்கும் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
7. அடிக்கடி இரத்தக் கொதிப்பு அளவை சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இரத்தக் கொதிப்பு அதிகரித்தால் தாய்க்கு வலிப்பு வரக்கூடும்.
8. கடைசி மூன்று மாதத்திற்கு கண்டிப்பாக உடல் உறவு கொள்ளக்கூடாது. இதனால் குழந்தையானது குறை மாதத்திலே பிறக்கக்கூடும்.
மேற்கூறியவாறெல்லாம் நினைவில் கொண்டு இருந்தால் குழந்தையானது ஆரோக்கியமாக பிறப்பதுடன், தாயும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications