Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத தினமும் குடிங்க...
இங்கு தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். தாய்ப்பால் மூலம் தான் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும், நோயெதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். சில பெண்களுக்கு தாய்ப்பால் குறைவான அளவில் சுரக்கும்.

இதனால் குழந்தைக்கு போதுமான அளவில் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பல தாய்மார்கள் அவஸ்தைப்படுவார்கள். இப்பிரச்சனைக்கு ஓர் அற்புதமான ஆயுர்வேத வைத்தியம் உள்ளது. இந்த வைத்தியத்தின் மூலம் தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க முடியும். சரி, இப்போது அந்த வைத்தியம் என்னவென்று காண்போம்.

தேவையான பொருட்கள்:
எள் - 1 டீஸ்பூன்
பாதாம் பால் - 1/2 கப்

எள்
பெண்களின் உடலில் கால்சியம் அதிகம் இருந்தால் தான், தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இத்தகைய கால்சியம் எள்ளில் வளமாக உள்ளது.

பாதாம் பால்
பாதாம் பாலில் கால்சியம் மட்டுமின்றி, புரோட்டீனும் ஏராளமான அளவில் உள்ளது. எனவே புதிய தாய்மார்கள் பாதாம் பாலைக் குடிக்க தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும்.

தயாரிக்கும் முறை:
முதலில் மிக்ஸியில் பாதாம் பால் மற்றும் எள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பானத்தை தினமும் காலை உணவு உண்ட பின் குடிக்க வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு குடித்து வர, தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

குறிப்பு
இந்த பானத்தைக் குடிப்பதுடன், புதிய தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் தினமும் போதுமான அளவில் நீரைக் குடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், தினமும் தவறாமல் பாலைக் குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications