Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
தாய்ப்பாலைக் கொண்டு இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம் எனத் தெரியுமா?
இங்கு தாய்ப்பாலைக் கொண்டு எந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பால் ஆரோக்கியமானது என்பது அனைவருக்குமே தெரியும். தாய்ப்பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-பாடிகள் உள்ளது. எந்த ஒரு உணவும் தாய்ப்பாலுக்கு இணையாகாது. இந்த தாய்ப்பால் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும்.

இங்கு தாய்ப்பாலைக் கொண்டு எந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த பிரச்சனைகளுக்கு தாய்ப்பாலைக் கொண்டு விரைவில் தீர்வு காணுங்கள்.

கண்களில் தொற்றுநோய்கள்
சில பிறந்த குழந்தைகளுக்கு கண்களில் தொற்றுக்கள் ஏற்படும். இம்மாதிரியான சூழ்நிலையில் தாய்ப்பாலை காட்டனில் நனைத்து, கண்களைத் துடைத்து எடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தையின் கண் சிவப்பு நிறத்தில் இருந்தால், அப்போது கண்களில் ஒரு துளி தாய்ப்பாலை விடுங்கள். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியோர்களுக்கும் பொருந்தும்.

காதுகளில் தொற்றுநோய்கள்
குழந்தைகளுக்கு 6-8 மாதங்களில் காதுகளில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே அழும் குழந்தையை பலவாறு சமாளித்தும் சமாதானமாகாமல் இருந்தால், குழந்தையின் காதுகளில் ஏதோ பிரச்சனை உள்ளதென்று அர்த்தம். அப்போது உடனே மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையுடன் காதுகளில் தாய்ப்பாலை சிறிது விடுங்கள்.

முகப்பரு
தாய்ப்பாலைக் கொண்டு முகப்பருக்களைப் போக்கலாம் என்பது தெரியுமா? சில பிறந்த குழந்தைகளுக்கு 6-8 வாரங்களில் பருக்கள் வந்து மறைந்துவிடும். இருப்பினும், அப்படி வரும் முகப்பருவால் குழந்தைகளுக்கு அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க, தாய்ப்பாலைக் கொண்டு குழந்தையின் சருமத்தை துடைத்து எடுங்கள்.

வறட்சியான சருமம்
உங்கள் குழந்தைக்கு சருமம் அதிகமாக வறட்சியடைந்தால், தாய்ப்பாலைக் கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள். இதனால் குழந்தையின் சருமம் மேன்மேலும் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

அரிப்புகள்
சருமத்தில் ஏற்படும் அரிப்புகளுக்கு தாய்ப்பால் விரைவில் நல்ல பலனைத் தரும்.



Click it and Unblock the Notifications