Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
பெற்றோர்களே! உங்க டீன் ஏஜ் வயது பிள்ளைங்கள நீங்க எப்படி டீல் பண்ணனும் தெரியுமா?
ஒரு பெற்றோராக, நீங்கள் நெகிழ்வாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் பிடிவாதமாக இருக்கக்கூடாது. இதனால், உங்கள் குழந்தை சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
எல்லாருக்கும் டீன் ஏஜ் வயது என்பது பட்டாம்பூச்சி பறக்கும் பருவமாக இருக்கும். இந்த வயதில் டீன் ஏஜ் பிள்ளைகளால் தெளிவாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், டீன் ஏஜ் வயது என்பது இளம் வயதினருக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் கொந்தளிப்பாக இருக்கும். ஒரு டீன் ஏஜ் குழந்தையின் பழக்கங்கள் மற்றும் இன்னல்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், அவர்களின் மனநிலையை எளிதாக்குவதற்கு பெற்றோர்கள் போதுமான ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய, பதின்ம வயதினரின் பெற்றோர் பொறுமையாகவும், ஈடுபாட்டுடனும், புரிந்துகொள்ளுதலுடனும் இருக்க வேண்டும்.

ஆனால் இந்த குணங்களைத் தவிர, இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களையும் பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டும். அவை என்னென்ன விஷயங்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ஆரோக்கியமான தகவல்தொடர்பு
பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளிடையே ஆரோக்கியமான தகவல்தொடர்புகளை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் பிள்ளையுடன் நீங்கள் நட்பாக பழக வேண்டும், அவர்கள் செயல்பட நீங்கள் அனுமதிக்க வேண்டும். நீங்கள் உங்கள் டீன் ஏஜ் பிள்ளையிடம் உரையாடல்களைத் தொடரும் வரை, உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்கள் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள், மாறாக அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.

பெற்றோராகவும் நண்பராகவும் இருங்கள்
ஒரு பெற்றோராக, நீங்கள் நெகிழ்வாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் பிடிவாதமாக இருக்கக்கூடாது. இதனால், உங்கள் குழந்தை சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சூழ்நிலை என்ன கோருகிறது என்பதைப் பொறுத்து, பெற்றோராக, ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும். நண்பராக, அவர்களின் மகிழ்ச்சிகளையும், வெற்றிகளையும், அவர்களின் சாதனைகளைக் கொண்டாட வேண்டும்.

விமர்சனத்தை குறைந்தபட்சமாக வைத்திருங்கள்
ஆக்கபூர்வமான விமர்சனம் நல்லது. அங்கு நீங்கள் குழந்தைகள் எங்கு வளரலாம் மற்றும் சிறப்பாக மாறலாம் என்று சொல்லுங்கள். ஆனால் எல்லா நேரத்திலும் விமர்சன ரீதியாக இருப்பது, அவர்களை குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததாக உணர வைக்கும். உங்கள் டீன் ஏஜ் பிள்ளை குறைபாடுள்ளவராக உணர வைப்பது அவர்களின் நம்பிக்கையையும் சுயமரியாதையையும் பாதிக்கலாம். பெற்றோர்களாகிய நீங்கள் குறைகூறுவதைக் குறைத்துக்கொள்வதே சிறந்தது. இது உங்கள் குழந்தையின் வாழ்க்கைக்கு நல்லது.

சுய கவனிப்பை ஊக்குவிக்கவும்
உங்கள் டீன் ஏஜ் பருவத்தில் நல்ல சுய கவனிப்பை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இது மற்றவர்களை விட தங்களை முதன்மைப்படுத்த உதவுகிறது, இது தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு கட்டுமானத் தொகுதியாகும். மேலும், பதின்ம வயதினரின் சுய-கவனிப்புப் பழக்கங்களை ஊக்குவிப்பது அவர்கள் எதிர்காலத்தை சிறப்பாகச் சமாளிக்க உதவும், அதே நேரத்தில் மனநலப் போராட்டங்களின் அபாயத்தைக் குறைக்கும்.

வற்புறுத்த வேண்டாம்
உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் தயாராக இல்லை என்றால், அவர்களை சுதந்திரமாக இருக்க வற்புறுத்தாதீர்கள். பொறுப்பும் சுதந்திரமும் காலப்போக்கில் வரும். நீங்கள் அதை யாரோ ஒருவர் மீது திணிக்க முடியாது. பதின்ம வயதில் பொறுப்பாக இருக்க முடியாது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயதினரை சுதந்திரமாக இருக்கத் தூண்டக்கூடாது. அவர்கள் அதற்குத் தயாராக இல்லாவிட்டாலும் கூட அவர்களை வற்ப்புறுத்த கூடாது. உங்கள் பிள்ளை அவர்கள் விரும்புவதை செய்ய அனுமதிக்கவும், படிப்படியாக அணுகுமுறையை எடுக்க அனுமதிக்கவும். மிக முக்கியமாக, அவர்கள் அழுத்தம் அல்லது அன்பற்றவர்களாக உணரவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.



Click it and Unblock the Notifications