Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
பெற்றோர்களே! உங்க குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப அவங்களுக்கு உங்க கவனம் தேவையாம்!
உங்கள் கவனத்தைத் தேடும் குழந்தை தொடர்ந்து உங்கள் உதவியைக் கேட்கும். உங்கள் குழந்தை சொந்தமாக விஷயங்களைச் செய்யக்கூடியவர்களாக இருந்தாலும், அவர்கள் வழிகாட்டுதலுக்காக உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பது என்பது மிக முக்கியமான பொறுப்பாக இருக்கும். தங்கள் குழந்தைகளை நல்லவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் சாதனையாளர்களாகவும் வளர்க்கத்தான் எல்லா பெற்றோர்களும் விரும்புவார்கள். எல்லா குழந்தைகளும் இங்கு ஒரே மாதிரியானவர்கள் இல்லை. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனி விருப்பம் மற்றும் ஆசைகள் இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் பாதுகாப்பாக உணரும் ஒரு விஷயத்துடன் நெருக்கமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்கிறார்கள். அதாவது அவர்களின் பெற்றோர். அன்பு, பாசம் மற்றும் கவனத்தை மட்டுமே அவர்கள் தேடுகிறார்கள். இருப்பினும், இன்றைய உலகில், பெற்றோர்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மும்முரமாக இருப்பதால், குழந்தைகள் ஒதுக்கப்பட்டதாக உணரலாம்.

பெற்றோரின் கவனத்தை பெற குழந்தைகள் ஆசைப்படுவார்கள். உங்கள் பிள்ளைக்கு உங்களின் கவனம் தேவை என்பதை வலியுறுத்தும் சில அறிகுறிகள் உள்ளன. குழந்தைகளின் மீது அதிக கவனம் தேவை என்பதைச் சொல்லும் அனைத்து பெற்றோர்களுக்கான சில அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

குழந்தைகள் உங்களோடு ஒட்டிக்கொண்டிருப்பது
குழந்தைகள் பல காரணங்களுக்காக பெற்றோரிடம் ஒட்டும் நடத்தையை வெளிப்படுத்தலாம். சில நேரங்களில் அவர்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதற்காகக்கூட இருக்கலாம். மற்ற நேரங்களில் அது பற்றாக்குறை அல்லது போதுமான கவனமின்மை காரணமாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், பெற்றோர்கள் குழந்தைகள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பற்றுதல் பெரும்பாலும் பாதுகாப்பாக உணர வேண்டியதன் அவசியத்திலிருந்து எழுகிறது. உங்கள் குழந்தை உங்களைப் பிடித்துக் கொண்டிருப்பதை அல்லது தொடர்ந்து உங்களைப் பின்தொடர்வதை நீங்கள் கண்டால், அதற்குப் பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

கோபத்தை வெளிப்படுத்துதல்
உங்கள் குழந்தையின் விவரிக்கப்படாத கோபம் மிகவும் அச்சுறுத்தும் வகையிலும் தொந்தரவாகவும் இருக்கும். ஆனால், அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. சாத்தியமான காரணங்களில் ஒன்று கவனக்குறைவாக இருக்கலாம். கவனத்தை ஈர்க்கும் ஒரு குழந்தை, அதைப் பெறுவதற்குத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யலாம். அது பொங்கி எழும் கோபத்தை உங்கள் மீது வீசுவதும் ஆகும். இதில் கத்துவது, அலறுவது மற்றும் அழுவது ஆகியவையும் அடங்கும்.

ஆக்ரோஷமான நடத்தையை வெளிப்படுத்துதல்
கவனத்தைத் தேடும் குழந்தைகள் பெரும்பாலும் ஆக்ரோஷமான நடத்தையை வெளிக்காட்டுவார்கள். இது பொம்மைகள் உட்பட பொருட்களை வீசுதல், அடித்தல், சுய தீங்கு விளைவித்தல் மற்றும் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த விஷயத்தையும் உள்ளடக்கியது. பெற்றோரின் உடனடி கவனத்தைப் பெறுவதற்கு இது எளிதான வழிகளில் ஒன்றாகும்.

தேவையில்லாதபோதும் உதவி கேட்கிறார்கள்
உங்கள் கவனத்தைத் தேடும் குழந்தை தொடர்ந்து உங்கள் உதவியைக் கேட்கும். உங்கள் குழந்தை சொந்தமாக விஷயங்களைச் செய்யக்கூடியவர்களாக இருந்தாலும், அவர்கள் வழிகாட்டுதலுக்காக உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். இது உங்களுடன் நெருக்கமாக இருக்கவும் உங்கள் கவனத்தை ஈர்க்கவும் உதவும் ஒரு தந்திரமாக அவர்கள் நினைக்கிறார்கள்.

வேண்டுமென்றே மெதுவாக செய்வது
குழந்தைகள் சிறியவர்களாகவும், அப்பாவிகளாகவும் தோன்றலாம். ஆனால் விஷயங்கள் தங்கள் வழியில் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அதை அடைய அவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும். அவர்கள் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்பினால், அவர்கள் வேண்டுமென்றே விஷயங்களைச் செய்வார்கள் அல்லது மெதுவாக வேலைகளைச் செய்வார்கள். இதனால் நீங்கள் உண்மையில் அவர்களைக் கவனித்து அவர்களுக்கு உதவுவீர்கள். அவர்கள் தங்கள் கவலைகளுக்கு ஒருபோதும் குரல் கொடுக்க மாட்டார்கள் என்றாலும், அவர்கள் விஷயங்களைச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பார்கள்.



Click it and Unblock the Notifications











