Just In
- 18 min ago
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
- 48 min ago
அகோரிகள் ஏன் மனித உடல்களை சாப்பிடுகிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
- 5 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 17 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Don't Miss
- News
கூட்டணி தர்மத்துக்காகவே குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பு- டாக்டர் ராமதாஸ்
- Finance
ஹைதராபாத் நிறுவனத்தில் 141 கோடி முதலீடு செய்த முகேஷ் அம்பானி..!
- Technology
உங்களுக்கே முன்னுரிமை: பி.எஸ்.என்.எல்-க்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதி
- Movies
சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் ஹீரோ டிரைலர் லான்ச்!
- Automobiles
நீங்கள் எதிர்பார்க்கும் புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் குழந்தையைப் போல் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? அப்ப இத படிங்க...
குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் என பெற்றோர்கள் அறியப்படுகிறார்கள். குழந்தைகள் வாழ்க்கையில் பல மதிப்புமிக்க பாடங்களை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். மூத்தவர்கள் மட்டுமே தங்கள் இளையவர்களுக்கு கற்பிக்க முடியும் என்று பொதுவாக நம்பப்படுகிறது.
இருப்பினும், இது முற்றிலும் உண்மை இல்லை. பெரியவர்கள் கூட தங்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் மாற்றக்கூடிய பல குணங்கள் உள்ளன. எனவே இதுபோன்ற சில விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்யுங்கள்
பெரியவர்களுடன் எப்போதும் ஒரு சிக்கல் இருக்கிறது! அவர்கள் கட்டாயத்தால் செயல்படுகிறார்கள். அவர்களின் விருப்பத்தால் அல்ல. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நாங்கள் அதை அரிதாகவே செய்கிறோம். குழந்தைகள் எப்போதும் வேடிக்கையாக இருப்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இது சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. பெரியவர்கள் பெரும்பாலும் தங்கள் நிர்பந்தங்களில் சிக்கி, அவர்களின் (முழு) வாழ்க்கையிலும் அழுத்தமாக இருக்கிறார்கள்.

வெவ்வேறு மனநிலைகள்
குழந்தைகள் ஒரு செயலைச் செய்யும் போது. மற்றவர்கள் அதனை கவனித்தால், மற்றவர் என்ன சொல்வார் அல்லது நினைப்பார் என்று குழந்தைகள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. அதே சமயம் நாம் எந்த வேலையும் செய்வதற்கு முன்பு, மற்றவர்களின் கருத்துகள் மற்றும் அணுகுமுறைகளால் நாம் பாதிக்கப்படுகிறோம். மேலும், பல முறை, நம் ஆசைகளையும் மகிழ்ச்சியையும் அழிக்கிறோம். உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கவனக்குறைவான அணுகுமுறையையும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பின்னர் அதை அழகாக ஆராயுங்கள்.

நேர்மை
இது பொதுவாக குழந்தைகளில் மட்டுமே காணப்படும் ஒரு குணம். அவர்களின் இதயங்கள் தூய்மையானவை. எனவே நீங்கள் அவர்களிடம் ஏதேனும் கேள்வி கேட்டால், அவர்கள் சரியான மற்றும் நேரடி பதிலைக் கொடுப்பார்கள். வயதானவர்கள் எப்போதும் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சி செய்கிறார்கள் (எனவே அவர்களின் மகிழ்ச்சி எங்கோ தொலைந்து போகிறது). அதை எளிமையாக்க உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள் (நீங்கள் தானாகவே பல சிக்கல்களில் இருந்து வெளியேறுவீர்கள்).

மகிழ்ச்சியாக இருங்கள்
குழந்தைகள் எப்போதும் திருப்தியும், வசதியும் உடையவர்கள்; மேலும், மகிழ்ச்சியாக இருக்க அவர்களுக்கு எந்த குறிப்பிட்ட காரணமும் தேவையில்லை. குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை சிறிய விஷயங்களில் பார்க்கிறார்கள். மறுபுறம், பெரியவர்களான நாம் எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால் நாம் இன்னும் அதிகமானவற்றை விரும்புகிறோம். எனவே, நம்மிடம் உள்ள பொருட்களின் முக்கியத்துவத்தையும் மகிழ்ச்சியையும் நம்மால் உணர முடியவில்லை.

உங்கள் நிகழ்காலத்தில் வாழுங்கள்
எல்லோரும் குழந்தைகளிடமிருந்து பின்பற்ற வேண்டிய ஒரு குணம் இது. குழந்தைகள் ஒவ்வொரு கணமும் வாழ்கிறார்கள், அனுபவிக்கிறார்கள். அதே நேரத்தில் நாம் அனைவரும் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளில் நம் நிகழ்காலத்தை வீணாக்குகிறோம். கடந்து வந்த தருணம் ஒருபோதும் திரும்பாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் கவலைப்படுகிற எதிர்காலம் 'ஒருவேளை' இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

ஆர்வத்துடன் இருங்கள்
நீங்கள் எப்போதாவது குழந்தைகளை கவனமாக பார்த்தீர்களா? அவர்கள் புதிதாக ஒன்றைக் காணும் போதெல்லாம், அதற்கான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள். குழந்தைகளின் இந்த குணத்தை நாம் பின்பற்றினால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதைத் தடுக்க எதுவும் முடியாது. ஏனென்றால், நாம் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வேலையைத் தொடங்குகிறோம். ஆனால் சிறிது நேரம் கழித்து, அந்த உற்சாகம் தளர்ந்துவிடுகிறது. பின்னர் வேலை முழுமையடையாது.