Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
பெற்றோர்களே எச்சரிக்கை! குழந்தைகள் அறிகுறியற்ற நோயாளிகளாக உள்ளார்களாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
குழந்தைகள் கொரோனா வைரஸை பல வாரங்கள் தொண்டை மற்றும் மூக்கில் சுமக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?ஆம், இது உண்மை தான்.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் குறித்து புதிய விஷயங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவாறு உள்ளனர். அதே சமயம் உலகின் பல பகுதிகளிலும் இந்த கொடிய வைரஸிற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகள் கொரோனா வைரஸை பல வாரங்கள் தொண்டை மற்றும் மூக்கில் சுமக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?ஆம், இது உண்மை தான். இந்த காலத்தில் குழந்தைகளுக்கு எந்த அறிகுறிகளும் தெரியாமல் அறிகுறியற்றவர்களாக இருக்கலாம். இந்த கூற்று வாஷிங்டனின் குழந்தைகள் தேசிய மருத்துவமனையின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

விளையாட்டுக்களால் அதிகரிக்கும் ஆபத்து
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாவிட்டால், அவர்கள் சமூகத்தில் வைரஸை எளிதில் பரப்ப வாய்ப்புள்ளது. அதுவும் தொற்று ஏற்பட்டுள்ள குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடும் போது, அது அவர்களுக்கும் பரவி, அப்படியே அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கும் பரவி தீவிரமாகிறது. சராசரியாக, அறிகுறியற்ற குழந்தைகளிடம் 14 நாட்களில் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.

சோதனைக்கு பின் வழக்குகள் அதிகரிக்கக்கூடும்
கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென் கொரியாவில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கொரோனா நோய்த்தொற்று குழந்தைகளிடம் ரகசியமாக பரவி வருவதைக் காணலாம் என்று கூறுகின்றனர். இந்த ஆய்வில் 85 தொற்று ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படவில்லை. அதாவது அவர்கள் அறிகுறியற்றவர்களாக உள்ளனர் என்பது தெரிய வந்தது. மேலும் கோவிட்-19 குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒருவேளை இது மேலும் நடந்தால், சமூகத்தில் அறிகுறியற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

ஆராய்ச்சி மற்றும் புதிய வழிகாட்டுதல்கள்
அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார நிறுவனமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு எதிர்ப்பு இருக்கும் போது, இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் சி.டி.சி ஒரு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி, அறிகுறியற்ற நோயாளிகள் தேவையில்லாமல் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. அதுவும் அவர்கள் கொரோனா நோயாளியுடன் தொடர்பு கொள்ளும் வரை, சோதனை செய்யத் தேவையில்லை. ஆனால் சி.டி.சி-யின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் என்று கூறுகிறது.

அறிகுறியற்ற குழந்தைகள்
பிப்ரவரி 18 முதல் மார்ச் 31 வரை தென் கொரியாவில் 91 அறிகுறியற்ற, முன் நோய்க்குறி மற்றும் அறிகுறியுடைய குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்குமே சோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த குழந்தைகளில் சுமார் 20 குழந்தைகளுக்கு கொரோனாவின் அறிகுறிகள் தெரியவில்லை. இவர்கள் அறிகுறியற்றவர்களாவர். மேலும் 91 குழந்தைகளில் 18 பேருக்கு கொரோனா அறிகுறிகள் வெளிப்பட்டது. இந்த குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் தெரியவில்லை. ஆனால் அதன் பின்னர் அறிகுறிகள் வெளிப்பட்டது. அதே சமயம் மீதமுள்ள குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் தெளிவாக காணப்பட்டது. ஆனால் இந்த குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு, அடிவயிற்று வலி, வாசனை அல்லது சுவை இழப்பு போன்ற அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

முடிவு
முதியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகத் தான் இருக்கும். எனவே கொரோனா பரவும் சமயத்தில் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிப்பதைத் தவிர்த்திடுங்கள். மேலும் குழந்தைகளுக்கு தனிமனித சுகாதாரத்தையும், சமூக இடைவெளியையும் கற்றுக் கொடுங்கள். இதனால் உங்கள் குழந்தைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications