Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உங்கள் குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளில் பளு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்!!!
உங்கள் குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளில் பளு அதிகரித்துள்ளதா? அவர்களுக்கும் ஒரு இடைவேளை தேவை. அவர்களுக்கும் அமைதியான வாழ்க்கை தேவை. அவர்களின் அன்றாட நடவடிக்கைளின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே போனால் அவர்கள் மூச்சு விடுவதற்கு கூட ஏங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் நன்றாக யோசியுங்கள்.
கடந்த சில தினங்களாக, உங்கள் குழந்தை ஓய்வில்லாமல் இருப்பதை நீங்கள் கண்டீர்கள் என்றால், பிரச்சனை பூதாகரமாய் வெடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான அட்டவணையை அளவுக்கு அதிகமாக நிரப்பி கொண்டே இருப்பார்கள். பள்ளி முடிந்தவுடனேயே தங்கள் குழந்தைகளை ட்யூஷன் வகுப்பு, கிட்டார் வகுப்பு, ஆர்ட் வகுப்பு, யோகா வகுப்பு என பல்வேறு வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பார்கள். கொஞ்சமாவது சுதந்திரமாக இருக்க வேண்டிய குழந்தைகளின் வாழ்க்கை நெருக்கடியாக மாறிவிடும்.
பள்ளி முடிந்தவுடன், குழந்தைகள் கண்டிப்பாக செய்ய வேண்டிய வேலை ஒன்று என்றால் அது அவர்களின் வீட்டு பாடமாகும். இந்த பட்டியலோடு மேலும் பலவற்றை சேர்ப்பது குழந்தைகளை ஓடிக்கொண்டே இருக்கச் செய்யும். உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்தால், அவர்களின் சுமையை குறைக்க முயற்சி செய்யவும்.

சோர்வு
பள்ளி முடிந்து வரும் உங்கள் குழந்தை மிகவும் சோர்வாக இருந்தால், அவர்கள் அதிக பளுவுடன் உள்ளார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

மதிப்பெண்கள்
உங்கள் குழந்தை திடீரென தன் பாடங்களில் தேர்ச்சி புரியவில்லை என்றால், குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனியுங்கள். சோர்வை வரவழைக்கின்ற அவர்களின் அன்றாட நடவடிக்கைகளே அதற்கு காரணமாக இருக்கலாம்.

மனநிலைகள்
உங்கள் குழந்தை எப்போது பார்த்தாலும் உம்மென்று, மன அழுத்தத்துடன் காணப்பட்டால், சோர்வை வரவழைக்கின்ற அன்றாட நடவடிக்கைகள் அதற்கான காரணமாக இருக்கலாம்.

தலைவலி
தலை வலிக்கிறது, உடல் வலிக்கிறது என உங்கள் குழந்தை அடிக்கடி கூறி அழுதால், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கவனியுங்கள். அவர்களின் தோளில் இருந்து பளுவை சற்று குறையுங்கள்.



Click it and Unblock the Notifications











