Latest Updates
-
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா?
உங்கள் குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளில் பளு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்!!!
உங்கள் குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளில் பளு அதிகரித்துள்ளதா? அவர்களுக்கும் ஒரு இடைவேளை தேவை. அவர்களுக்கும் அமைதியான வாழ்க்கை தேவை. அவர்களின் அன்றாட நடவடிக்கைளின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே போனால் அவர்கள் மூச்சு விடுவதற்கு கூட ஏங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் நன்றாக யோசியுங்கள்.
கடந்த சில தினங்களாக, உங்கள் குழந்தை ஓய்வில்லாமல் இருப்பதை நீங்கள் கண்டீர்கள் என்றால், பிரச்சனை பூதாகரமாய் வெடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான அட்டவணையை அளவுக்கு அதிகமாக நிரப்பி கொண்டே இருப்பார்கள். பள்ளி முடிந்தவுடனேயே தங்கள் குழந்தைகளை ட்யூஷன் வகுப்பு, கிட்டார் வகுப்பு, ஆர்ட் வகுப்பு, யோகா வகுப்பு என பல்வேறு வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பார்கள். கொஞ்சமாவது சுதந்திரமாக இருக்க வேண்டிய குழந்தைகளின் வாழ்க்கை நெருக்கடியாக மாறிவிடும்.
பள்ளி முடிந்தவுடன், குழந்தைகள் கண்டிப்பாக செய்ய வேண்டிய வேலை ஒன்று என்றால் அது அவர்களின் வீட்டு பாடமாகும். இந்த பட்டியலோடு மேலும் பலவற்றை சேர்ப்பது குழந்தைகளை ஓடிக்கொண்டே இருக்கச் செய்யும். உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்தால், அவர்களின் சுமையை குறைக்க முயற்சி செய்யவும்.

சோர்வு
பள்ளி முடிந்து வரும் உங்கள் குழந்தை மிகவும் சோர்வாக இருந்தால், அவர்கள் அதிக பளுவுடன் உள்ளார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

மதிப்பெண்கள்
உங்கள் குழந்தை திடீரென தன் பாடங்களில் தேர்ச்சி புரியவில்லை என்றால், குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனியுங்கள். சோர்வை வரவழைக்கின்ற அவர்களின் அன்றாட நடவடிக்கைகளே அதற்கு காரணமாக இருக்கலாம்.

மனநிலைகள்
உங்கள் குழந்தை எப்போது பார்த்தாலும் உம்மென்று, மன அழுத்தத்துடன் காணப்பட்டால், சோர்வை வரவழைக்கின்ற அன்றாட நடவடிக்கைகள் அதற்கான காரணமாக இருக்கலாம்.

தலைவலி
தலை வலிக்கிறது, உடல் வலிக்கிறது என உங்கள் குழந்தை அடிக்கடி கூறி அழுதால், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கவனியுங்கள். அவர்களின் தோளில் இருந்து பளுவை சற்று குறையுங்கள்.



Click it and Unblock the Notifications