Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
உங்கள் குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளில் பளு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்!!!
உங்கள் குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளில் பளு அதிகரித்துள்ளதா? அவர்களுக்கும் ஒரு இடைவேளை தேவை. அவர்களுக்கும் அமைதியான வாழ்க்கை தேவை. அவர்களின் அன்றாட நடவடிக்கைளின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே போனால் அவர்கள் மூச்சு விடுவதற்கு கூட ஏங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் நன்றாக யோசியுங்கள்.
கடந்த சில தினங்களாக, உங்கள் குழந்தை ஓய்வில்லாமல் இருப்பதை நீங்கள் கண்டீர்கள் என்றால், பிரச்சனை பூதாகரமாய் வெடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான அட்டவணையை அளவுக்கு அதிகமாக நிரப்பி கொண்டே இருப்பார்கள். பள்ளி முடிந்தவுடனேயே தங்கள் குழந்தைகளை ட்யூஷன் வகுப்பு, கிட்டார் வகுப்பு, ஆர்ட் வகுப்பு, யோகா வகுப்பு என பல்வேறு வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பார்கள். கொஞ்சமாவது சுதந்திரமாக இருக்க வேண்டிய குழந்தைகளின் வாழ்க்கை நெருக்கடியாக மாறிவிடும்.
பள்ளி முடிந்தவுடன், குழந்தைகள் கண்டிப்பாக செய்ய வேண்டிய வேலை ஒன்று என்றால் அது அவர்களின் வீட்டு பாடமாகும். இந்த பட்டியலோடு மேலும் பலவற்றை சேர்ப்பது குழந்தைகளை ஓடிக்கொண்டே இருக்கச் செய்யும். உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்தால், அவர்களின் சுமையை குறைக்க முயற்சி செய்யவும்.

சோர்வு
பள்ளி முடிந்து வரும் உங்கள் குழந்தை மிகவும் சோர்வாக இருந்தால், அவர்கள் அதிக பளுவுடன் உள்ளார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

மதிப்பெண்கள்
உங்கள் குழந்தை திடீரென தன் பாடங்களில் தேர்ச்சி புரியவில்லை என்றால், குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனியுங்கள். சோர்வை வரவழைக்கின்ற அவர்களின் அன்றாட நடவடிக்கைகளே அதற்கு காரணமாக இருக்கலாம்.

மனநிலைகள்
உங்கள் குழந்தை எப்போது பார்த்தாலும் உம்மென்று, மன அழுத்தத்துடன் காணப்பட்டால், சோர்வை வரவழைக்கின்ற அன்றாட நடவடிக்கைகள் அதற்கான காரணமாக இருக்கலாம்.

தலைவலி
தலை வலிக்கிறது, உடல் வலிக்கிறது என உங்கள் குழந்தை அடிக்கடி கூறி அழுதால், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கவனியுங்கள். அவர்களின் தோளில் இருந்து பளுவை சற்று குறையுங்கள்.



Click it and Unblock the Notifications