Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
குழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமல் இருக்க வேண்டுமா?

குழந்தைகளது மனஅழுத்தத்தை குறைக்க...
1. முதலில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் நண்பர்கள் போன்று பழக வேண்டும். மேலும் குழந்தைகளது கஷ்டத்தையும், சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பர்களாக வேண்டும். அவர்கள் படிக்கும் போது அவர்களோடு உட்கார்ந்து, உங்களுக்கு தெரிந்த முறையில் அவர்கள் மனதில் பதியும் வகையில் ஈஸியாக சொல்லித்தரலாம். வீட்டில் இருக்கும் போது ஏதேனும் பாட்டை போட்டுவிட்டு அவர்களோடு நீங்களும் ஆடலாம். மேலும் அவர்களோடு விளையாடலாம்.
2. குழந்தைகளுக்கு போதுமான அளவு தூக்கமானது இருக்க வேண்டும். நிம்மதியான தூக்கம் அவர்களுக்க மனஅழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.மேலம் குழந்தைகளுக்கு குறைந்தது 9 10 மணிநேரமாவது தூங்க வைக்க வேண்டும். குழந்தைகள் மனநிலையானது பாதிப்படைய போதிய தூக்கம் இல்லாததே என்றும் சொல்லலாம்.
3. குழந்தைகளை ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்தலாம். அதற்காக உங்களது கனவான விளையாட்டுகளை துன்புறுத்தி விளையாட வைக்கக் கூடாது. குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டிலேயே அதிகமாக ஈடுபட வைக்க வேண்டும். இதனால் அவர்களது மனஅழுத்தத்தை குறைக்கலாம்.
4. வாரத்திற்கு ஒரு முறை அவர்களை எங்கேனும் அழைத்துச் செல்லலாம். இதனால் அவர்கள் சந்தோஷமாக இருப்பதோடு, அவர்களது மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வாறு அழைத்துச் செல்லும் இடமானது, அவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இருந்தால், மேலும் அது அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாகவும் இருக்கும்.
5. குழந்தைகளுக்கு ஆசனத்தில் ஒரு பயிற்சியான, மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் பயிற்சியை சொல்லிக் கொடுக்கவும். இதனால் எப்போதெல்லாம் உங்கள் குழந்தைகள் கோபமாக அல்லது மனமானது அழுத்தத்துடன் இருப்பது போல் இருக்கிறார்களோ, அப்போது அவர்களை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடச் சொல்லுங்கள். அதனால் பல நன்மைகள் இருக்கிறது. இவ்வாறு செய்வதால் அவர்கள் டென்சன் மற்றும் மனஅழுத்தம் குறையும்.
6. மேலும் அவர்கள் வருத்தமாகவோ அல்லது கஷ்டத்துடனோ இருக்கும் போது அவர்களுக்கு ஏதேனும் சாக்லெட் அல்லது அவர்களுக்கு பிடித்த பொருளைக் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தலாம். ஏனெனில் குழந்தைகளுக்கு அவர்கள் எதிர்பார்க்காததை செய்யும் போது அனைத்தையும் மறந்து சந்தோஷப்படுவர்.
மேற்கூறியவாறு செய்து பாருங்கள், குழந்தைகள் சந்தோஷமாக இருப்பதோடு, உங்களின் மீது இருக்கும் அன்பும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











