Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
குழந்தைங்களை தனியா விட்டுட்டு போகாதீங்க!

அவசரகால தொலைபேசி எண்கள்
தீ போன்ற ஆபத்து காலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய அவசர எண்களை குழந்தைகளுக்கு தெரியபடுத்த வேண்டியது அவசியம்.ஒருவேளை உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாரையாவது நியமித்திருந்தால் அவர்களின் மொபைல் போன்களிலும் அவசரகால எண்களை மெமரியில் சேகரித்த வையுங்கள். வீட்டில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களுக்கும் அவசரகால எண்களை தெரிவிப்பது அவசியம்,
வீட்டிற்குள் வைத்து பூட்டவேண்டாம்
குழந்தைகள் தனியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது ஆபத்தானது. திடீர் நிலநடுக்கமோ, தீ விபத்தோ ஏற்படும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது ஆபத்தானது. அது போன்ற சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லலாம்
பயிற்சி அளியுங்கள்
தனியாக இருக்க நேரும்போது தாங்களாகவே கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் இருப்பது குறித்தும். சங்கடங்கள் ஏற்படும்போது அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.
சமையலறை கதவை பூட்டுங்கள்
வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றாலே குழந்தைகள் சென்று விளையாடும் இடம் சமையலறைதான். எனவே முதலில் சமையலறை கதவை பூட்டுங்கள். குழந்தைகளுக்குத் தேவையான உணவுகளை ஹாட் பாக்ஸ்சில் போட்டு டேபிள் மேல் வைக்கவும். அவர்களுக்கு தேவையான தண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவைகளை தனியாக எடுத்து வைக்கவும். இதனால் குழந்தைகள் சமையலறைக்கு போக வாய்ப்புகள் எழாது.
தொலைக்காட்சி ரிமோட் கவனம்
தனியாக இருக்கும் தருணங்களில் தொலைக்காட்சியோ, கணினியோதான் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு. பெரியவர்கள் இல்லை என்றால் அவர்கள் இஷ்டம்தான். எனவே கண்டதையும் குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கும் வகையில் ப்ளாக் செய்து விடுங்கள். அது குழந்தைகளின் நலனுக்கு பாதுகாப்பானது.



Click it and Unblock the Notifications











