Just In
- 1 hr ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 2 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 2 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 3 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குழந்தைங்களை தனியா விட்டுட்டு போகாதீங்க!
அவசரகால தொலைபேசி எண்கள்
தீ போன்ற ஆபத்து காலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய அவசர எண்களை குழந்தைகளுக்கு தெரியபடுத்த வேண்டியது அவசியம்.ஒருவேளை உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாரையாவது நியமித்திருந்தால் அவர்களின் மொபைல் போன்களிலும் அவசரகால எண்களை மெமரியில் சேகரித்த வையுங்கள். வீட்டில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களுக்கும் அவசரகால எண்களை தெரிவிப்பது அவசியம்,
வீட்டிற்குள் வைத்து பூட்டவேண்டாம்
குழந்தைகள் தனியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது ஆபத்தானது. திடீர் நிலநடுக்கமோ, தீ விபத்தோ ஏற்படும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது ஆபத்தானது. அது போன்ற சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லலாம்
பயிற்சி அளியுங்கள்
தனியாக இருக்க நேரும்போது தாங்களாகவே கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் இருப்பது குறித்தும். சங்கடங்கள் ஏற்படும்போது அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.
சமையலறை கதவை பூட்டுங்கள்
வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றாலே குழந்தைகள் சென்று விளையாடும் இடம் சமையலறைதான். எனவே முதலில் சமையலறை கதவை பூட்டுங்கள். குழந்தைகளுக்குத் தேவையான உணவுகளை ஹாட் பாக்ஸ்சில் போட்டு டேபிள் மேல் வைக்கவும். அவர்களுக்கு தேவையான தண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவைகளை தனியாக எடுத்து வைக்கவும். இதனால் குழந்தைகள் சமையலறைக்கு போக வாய்ப்புகள் எழாது.
தொலைக்காட்சி ரிமோட் கவனம்
தனியாக இருக்கும் தருணங்களில் தொலைக்காட்சியோ, கணினியோதான் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு. பெரியவர்கள் இல்லை என்றால் அவர்கள் இஷ்டம்தான். எனவே கண்டதையும் குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கும் வகையில் ப்ளாக் செய்து விடுங்கள். அது குழந்தைகளின் நலனுக்கு பாதுகாப்பானது.