Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
டீன் ஏஜ் பிள்ளைகளிடம் ஒற்றர்களைப் போல செயல்படாதீர்கள்!

அந்தரங்கத்திற்கு மதிப்பளியுங்கள்
என்னதான் உங்கள் குழந்தைகள் என்றாலும் அவர்களின் அந்தரங்கத்திற்குள் எந்த அளவிற்கு நுழையவேண்டும் அதற்கான எல்லைகளை வரையறுத்துக்கொள்ளுங்கள். குழந்தைகளின் அறைக்குள் நுழையும் முன் கதவை தட்டுங்கள்.
ஒற்றர் வேலை வேண்டாமே
நம் பிள்ளைகளின் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும். அதை விடுத்து ஆங்காங்கே ஆள் வைத்து துப்பறிவது. குழந்தைகளின் டைரி, இமெயில், செல்போன் போன்றவைகளை செக்கிங் செய்வது போன்றவைகளை தவிருங்கள்.
சுதந்திரத்திரமாக விடுங்கள்
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவர்களுக்கான உடைகளை அவர்களையே தேர்வு செய்ய விடுங்கள். ஸ்டைலாக ஹேர் கட் செய்து கொள்ள விரும்புகிறார் என்றால் அனுமதியுங்கள். ஏனெனில் அதற்கான விமர்ச்சனத்தை அவர்களே அனுபவிக்கட்டும் அப்புறம் உங்கள் வழிக்கு வருவார்கள்.
பொறுப்புணர்வை கற்றுக்கொடுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு பொறுப்புகளையும், சுதந்திரத்தை எந்த அளவிற்கு கற்றுக்கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு இடைவெளியையும் மதிக்கக் கற்றுக் கொடுங்கள்.
குழந்தைகளின் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் பிள்ளைகளின் அனுமதியின்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பதின் பருவம் என்பது குழப்பமான பருவம். இந்த பருவத்தில் சுதந்திரமும் வேண்டும் அதேசமயம் பெற்றோர்களின் அன்பும் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனவே அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
ஆலோசனைகளை கேளுங்கள்
குழந்தைகளாகவே பார்க்காமல் அவர்களையும் தனிமனிதர்களாக பார்க்கவேண்டும். அவர்களிடம் அனைத்து விசயங்களையும் விவாதியுங்கள். அரசியலோ, விலைவாசி உயர்வோ எதுவென்றாலும் பேசுங்கள். அவர்களின் ஆலோசனைகளை கேளுங்கள்.
பதின் பருவத்தை கடப்பது என்பது சிக்கலானதுதான் எனவே முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். குழந்தைகள் உங்களிடம் பேச வரும்போது அவர்கள் கூறுவதை கேளுங்கள். பதின்பருவப் பிள்ளைகளிடம் நீங்கள் எந்த அளவிற்கு நடந்து கொள்கிறீர்களோ அதே அளவிற்கு அவர்களும் உங்களிடம் நடந்து கொள்ளுவார்கள். அப்புறம் உங்களின் அன்பிற்கு அவர்கள் கட்டுப்படுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications