Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
குட்டீஸ்க்கு கண் பிரச்சினை இருக்கா?

எப்படி கண்டறிவது?
இன்றைக்கு தொலைக்காட்சி, கம்யூட்டர் பார்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் பள்ளி செல்லும் குழந்தைகளில் 4 முதல் 5 சதவீதம் வரை பார்வைக் குறைபாடுகள் இருக்கின்றன. சில குழந்தைகள் கரும்பலகை, தொலைக்காட்சி ஆகியவற்றை அருகில் சென்று பார்க்கின்றனர். புத்தகத்தை முகத்துக்கு அருகில் வைத்துப் படிக்கின்றனர். கண்களை சுருக்கிப் படிக்கும் போதுதான் அவர்களுக்கு பார்வைக்குறைபாடு இருக்கிறது என்பதையே கண்டறியமுடிகிறது. இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தெரிந்தால் உடனே கண் மருத்துவரிடம் செல்வது நல்லது.
கண்ணுக்கு பயிற்சி
குழந்தைகளுக்கு கண்பார்வை கோளாறுகள் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். ஒரு இடத்தில் குழந்தைகளை அமரவைத்து இரண்டடி தூரத்தில் பல நிறங்களில் உள்ள பென்சில்களை வைக்கவேண்டும். நிறத்தைக் கூறி அந்த கலர் பென்சிலை சரியாக எடுக்கச் சொல்ல வேண்டும். இதேபோல் பென்சிலின் நிறங்களை இடம் மாற்றி வைத்து நிறங்களை கூறி எடுக்கச் சொல்லலாம். இதனால் நிறம் பற்றிய பிரச்ச்சினைகள் இருந்தால் எளிதில் அதை கண்டறியலாம். கண்பார்வை கோளாறுகளை சரி செய்ய குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்கலாம். கண்களை உள்ளங்கையினால் மூடிக்கொண்டு இட வலமாக கண்களை சுழற்றச் சொல்லாம்.
கண் பரிசோதனை
கண்புரை என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, பிறந்த குழந்தைக்கும் ஏற்படலாம்! கண்களில் அடிபடும்போதும் கண்புரை ஏற்படும். கண்புரையை கண்டறிந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்வது அவசியம். இல்லாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தைகளை பள்ளி செல்வதற்கு முன்பு, ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications
