Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லாந்து படுத்தால் குழந்தை இப்படிதான் பிறக்குமாம்... அப்போ எப்படி படுக்கணு
பெண்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தூங்க வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மிக முக்கியமான பதிவு தான் இது.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மல்லாந்து படுக்கக் கூடாது. சில குறிப்பிட்ட மாதங்கள் மட்டும் கிடையாது. கரு உருவானது முதல் குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிப் பெண்கள் மல்லாந்து படுக்கக் கூடாது. பிறகு எப்படி தான் படுப்பது என்று நீங்கள் கேட்கலாம்.

கர்ப்பிணிகள் எப்போதும் பக்கவாட்டில் திரும்பி தான் படுக்க வேண்டும். அதற்கான காரணங்களும் மல்லாந்து படுத்தால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பது பற்றியும் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்என்பது பற்றி இந்த கட்டுரையில் மிக விளக்கமாகப் பார்க்கலாம்.

அறிவியல் காரணம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையானது தான் அவர்கள் தூங்கும் முறை. கட்டாயம் மல்லாந்து படுத்து தூங்கக் கூடாது. பக்கவாட்டில் தான் தூங்க வேண்டும். இது ஏதோ காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றும் முறை மட்டும் அல்ல. அதையும் தாண்டி இதில் நிறைய அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

முதல் மூன்று மாதங்கள்
கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. அவ்வப்போது மல்லாந்து உட்காருவதோ படுக்கவோ செய்யலாம். ஆனால் நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும்.

கொடி சுற்றுதல்
குழந்தை கொடி சுற்றிப் பிறந்தது என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அது எப்படி என்றால் தாய் எப்போதாவது மல்லாந்து படுத்து தூங்கியிருப்பார். அப்படி மல்லாந்து படுக்கிற பொழுது கருப்பையில் இருக்கும் குழந்தை நீருக்குள் தானே மிதந்து கொண்டிருக்கும். அந்த குழந்தைக் கருவின் மீது தொப்புள் கொடி சுற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

அஜீரணக் கோளாறு
கரு உருவாகி நான்கு மாதங்களுக்குப் பிறகு குழந்தையினுடைய எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும். அந்த சமயத்தில் மல்லாந்து படுத்தால் தாயின் குடல் பகுதி மீது அது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக அஜீரணக் கோளாறுகளும் அசௌகரியமும் உருவாக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ரத்த ஓட்டம்
குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதிக எடையானது குழந்தையின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் நிலையில் மேலே பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் உள்ள எலு்புகளிலும் அழுத்தம் உண்டாகும். இதனால் தாயினுடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.

பக்கவாட்டில் படுத்தால்?
இதுவே தாய் பக்கவாட்டில் படுத்துத் தூங்கும் போது வயிற்றில் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போதும் கூட அசைவின்றி இருக்கும். ஏனென்றால் பக்கவாட்டில் படுக்கும்போது குழந்தை விளையாட நிறைய இடம் கிடைக்கும். ஆனால் இதுவே மல்லாந்து படுத்தாலோ அதிக நேரம் நின்று கொண்டிருந்தாலோ கருப்பையானது சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி தான் இருக்கும்.



Click it and Unblock the Notifications











