Latest Updates
-
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா?
கர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லாந்து படுத்தால் குழந்தை இப்படிதான் பிறக்குமாம்... அப்போ எப்படி படுக்கணு
பெண்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தூங்க வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மிக முக்கியமான பதிவு தான் இது.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மல்லாந்து படுக்கக் கூடாது. சில குறிப்பிட்ட மாதங்கள் மட்டும் கிடையாது. கரு உருவானது முதல் குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிப் பெண்கள் மல்லாந்து படுக்கக் கூடாது. பிறகு எப்படி தான் படுப்பது என்று நீங்கள் கேட்கலாம்.

கர்ப்பிணிகள் எப்போதும் பக்கவாட்டில் திரும்பி தான் படுக்க வேண்டும். அதற்கான காரணங்களும் மல்லாந்து படுத்தால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பது பற்றியும் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்என்பது பற்றி இந்த கட்டுரையில் மிக விளக்கமாகப் பார்க்கலாம்.

அறிவியல் காரணம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையானது தான் அவர்கள் தூங்கும் முறை. கட்டாயம் மல்லாந்து படுத்து தூங்கக் கூடாது. பக்கவாட்டில் தான் தூங்க வேண்டும். இது ஏதோ காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றும் முறை மட்டும் அல்ல. அதையும் தாண்டி இதில் நிறைய அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

முதல் மூன்று மாதங்கள்
கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. அவ்வப்போது மல்லாந்து உட்காருவதோ படுக்கவோ செய்யலாம். ஆனால் நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும்.

கொடி சுற்றுதல்
குழந்தை கொடி சுற்றிப் பிறந்தது என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அது எப்படி என்றால் தாய் எப்போதாவது மல்லாந்து படுத்து தூங்கியிருப்பார். அப்படி மல்லாந்து படுக்கிற பொழுது கருப்பையில் இருக்கும் குழந்தை நீருக்குள் தானே மிதந்து கொண்டிருக்கும். அந்த குழந்தைக் கருவின் மீது தொப்புள் கொடி சுற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

அஜீரணக் கோளாறு
கரு உருவாகி நான்கு மாதங்களுக்குப் பிறகு குழந்தையினுடைய எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும். அந்த சமயத்தில் மல்லாந்து படுத்தால் தாயின் குடல் பகுதி மீது அது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக அஜீரணக் கோளாறுகளும் அசௌகரியமும் உருவாக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ரத்த ஓட்டம்
குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதிக எடையானது குழந்தையின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் நிலையில் மேலே பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் உள்ள எலு்புகளிலும் அழுத்தம் உண்டாகும். இதனால் தாயினுடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.

பக்கவாட்டில் படுத்தால்?
இதுவே தாய் பக்கவாட்டில் படுத்துத் தூங்கும் போது வயிற்றில் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போதும் கூட அசைவின்றி இருக்கும். ஏனென்றால் பக்கவாட்டில் படுக்கும்போது குழந்தை விளையாட நிறைய இடம் கிடைக்கும். ஆனால் இதுவே மல்லாந்து படுத்தாலோ அதிக நேரம் நின்று கொண்டிருந்தாலோ கருப்பையானது சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி தான் இருக்கும்.



Click it and Unblock the Notifications