Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...
குழந்தை பேறுகாலத்தில் கால் தசைபிடிப்பு ஏற்படுவது ஒரு இயல்பான பிரச்சனை தான். ஆனால் அது மேலும் அவதி ஏற்படுத்தாமல் தடுப்பது நம் கையில் தான் இருக்கிறது. கர்ப்பம் தரிக்கும் போது தாய்மார்களின் வயிறு பெரிதாவது மற்றும் எடை அதிகரிப்பது ஆகிய காரணங்களால் இடுப்பு பகுதிக்கும், கால்களில் இருக்கும் இரத்த நாளங்களுக்கும் கூடுதல் அழுத்தத்தை கொடுக்கின்றது.
கால் தசைபிடிப்பு பெரும்பாலும் உறங்கும் நேரத்திலேயே உருவாகிறது. எனவே அத்தகைய பேறுகாலத்தின் போது ஏற்படும் கால் தசைபிடிப்புகளை தவிர்க்க ஒருசில குறிப்புகளை கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைப்பிடிப்புக்களை தடுக்கலாம்.

ஆரோக்கியமான உணவு
சில சூழ்நிலைகளில், சுண்ணாம்பு, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய கனிமங்களின் குறைபாட்டினால் கால் தசைபிடிப்பு உருவாகின்றது என்று கூறப்படுகிறது. இச்சூழலில் வாழைப்பழம், பாதாம், இலை நிறைந்த காய்கறி போன்றவற்றை மிதமான சிற்றுண்டியாக உண்ண வேண்டும். தீவிர மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் அவற்றின் மாற்று பொருட்களையும் சாப்பிடலாம்.

நடைபயிற்சி
மருத்துவர் அனுமதித்தால் மட்டும் முதல் மூன்று மாதங்களில் 1-2 மணி நேரங்களுக்கு ஒரு முறை 10 நிமிடம் நடைபயில்வது பரிந்துரைக்கப்படுகின்றது. இது கால்களில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவுகின்றது. நீண்ட நேரம் நிற்பதினால், கால் தசைபிடிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதை தவிர்த்திடுங்கள்.

கால் மீது கால் வைத்து உட்கார வேண்டாம்
இது கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடை செய்து குறைத்துவிடும். மேலும், படுத்திருக்கும் போது கால் கட்டை விரலை அடிக்கடி அசைப்பதன் மூலம், அவ்விடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.

சரியான நிலையில் படுப்பது
உடலின் மற்ற பகுதிகளை விட கால் சற்று உயரமான இடத்தில் இருக்கும்படி வைப்பது உதவிகரமாக இருக்கும். நேராக அல்லது இடதுபுறம் படுத்துக் கொள்வதையும் கருத்தில் கொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுவதால், இது பயனுள்ளதாக இருக்கும்.

கால் பயிற்சி
உடல் நிலையின் காரணமாக இலகுவாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் கால்கள் பயிற்சி செய்வதற்கு சுதந்திரமாகவே இருக்கும். படுக்கும் போதும், உட்காரும் போதும் சில அடிப்படை கால் பயிற்சிகளை செய்யுங்கள். இடதுபுறமும், வலது புறமும் கால்களை அசையுங்கள். அடுத்து ஒரு 30 முறை அவற்றை வளைத்து நிமிர்த்துங்கள். இல்லையெனில் கால்களை லேசாக அமுக்கிவிடுங்கள்.

சுடுதண்ணீர் ஒத்தடம்
சுடுதண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் கால்களை வைத்தோ அல்லது சூடான பேட்டை கால்களில் வைத்தோ சிறிது நேரம் ஒத்தடம் கொடுத்தால், கால் தசைபிடிப்பானது குறையும். அதிலும் உறங்கச் செல்லும் முன் இதை செய்தால் சிறந்த பயன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











