குழந்தைகள் நீண்ட நேரம் அழுவதற்கு இதில் ஒன்றுதான் காரணமா இருக்குமாம்... இனிமே அழாமல் பார்த்துக்கோங்க!

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தங்களின் உணர்வுகள் மற்றும் தேவைகளை பேச்சு வரும் வரை குழந்தைகள் பெரும்பாலும் அழுகை மற்றும் சிரிப்பின் மூலமே வெளிப்படுத்துவார்கள்.

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தங்களின் உணர்வுகள் மற்றும் தேவைகளை பேச்சு வரும் வரை குழந்தைகள் பெரும்பாலும் அழுகை மற்றும் சிரிப்பின் மூலமே வெளிப்படுத்துவார்கள். அதனை சரியாக புரிந்து கொண்டு அவர்களை கவனிப்பது என்பது மிகவும் அசாதாரணமான காரியமாகும்.

Causes of Excessive Crying in Babies in Tamil

குழந்தைகளின் அழுகையை புரிந்து கொள்வது என்பது புதிதாக அம்மாவானவர்களுக்கு மிகவும் கடினமானதாகும். குழந்தைகளின் அழுகையை புரிந்து கொள்ளாமல் இருப்பது அம்மாவிற்கு பதட்டத்ததையும், கவலையையும் அளிக்கும். ​​உங்கள் குழந்தை ஊட்டச்சத்து, அரவணைப்பு, அன்பு, பாதுகாப்பு மற்றும் ஆறுதலுக்காக அம்மாவை முழுமையாக நம்பியுள்ளார்கள். அழுகை என்பது குழந்தையின் தொடர்பு மற்றும் அம்மாவிடமிருந்து கவனத்தைப் பெறுவதற்கான வழியாகும். உங்கள் குழந்தை விடாப்பிடியாக தொடர்ந்து அழுவதற்கான காரணங்கள் என்னென்ன இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பசி

குழந்தையை தூக்கும்போது கன்னத்தில் அல்லது உதடுகளில் அடிப்பது உங்கள் முஷ்டிகளை உறிஞ்சுவது அல்லது உங்கள் மார்பகங்களை நோக்கி சாய்வது போன்றவை பசியின் அறிகுறிகளாகும். பசியின் அறிகுறிகளைக் கண்டவுடன் உங்கள் குழந்தைக்கு உணவளிக்கவும். குழந்தையின் பசியை உடனடியாக கவனிப்பது, உங்கள் குழந்தையின் நீண்ட நேர அழுகையைச் சமாளிக்க வேண்டியதிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

வயிறு வலி

உங்கள் குழந்தைகள் சாப்பிட்டவுடன் ஏப்பம் விட வேண்டும். ஏப்பம் வரவில்லை என்றால் உங்கள் குழந்தையின் மெதுவாக தேய்க்கவும் மற்றும் வயிற்றில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது அவர்களின் வயிற்று வலியை குறைக்க உதவும்.

டயப்பர் மாற்றுதல்

டயப்பர் ஈரமாக இருப்பது எப்போதும் குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும், இதன் விளைவாக அவர்கள் அழத் தொடங்குவார்கள். உங்கள் குழந்தை கனமான டயப்பரால் அழுதால் உடனடியாக அதனை மாற்றுங்கள்.

நோயின் அறிகுறி

உங்கள் குழந்தை இடைவிடாது அழுதால், அது தீவிர குறைபாட்டின் அறிகுறியாகும். நோய்க்கான அறிகுறிகளைக் காட்டினால் அல்லது 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கவனத்தை ஈர்ப்பது

குழந்தைகளுக்கு நிறைய கட்டிப்பிடித்தல், உடல் தொடர்பு தேவைப்படும், எனவே அழுகை சில கூடுதல் கவனத்தையும் அரவணைப்பையும் பெற ஒரு சிறந்த வழியாகும். உங்கள் குழந்தை உங்களைப் பார்த்து தொடர்ந்து அழுதால் அவர்களை உடனடியாக தூக்கிக் கொள்ளுங்கள்.

Story first published: Friday, March 17, 2023, 19:45 [IST]
Desktop Bottom Promotion