Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
கருச்சிதைவு ஏற்படுத்தும் எதிா்மறை எண்ணங்களில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது?
பெண்கள் தங்களுக்கு நிகழும் கருச்சிதைவைப் பற்றி வெளியில் பேச வெட்கப்படுகின்றனா் அல்லது மற்றவா்கள் தங்களைப் பற்றி தவறாக நினைப்பா்களோ என்று கவலைப்படுகின்றனா். அதனால் கருச்சிதைவைப் பற்றி வெளியில் குறைவாகவே பேசப்படுகிறது.
கருச்சிதைவு என்பது பொதுவாக எல்லா பெண்களுக்குமே ஏற்படக்கூடிய ஒரு சோக நிகழ்வு ஆகும். கருச்சிதைவைப் பற்றி நமது சமூகத்தில் எவரும் அதிகம் பேசுவது இல்லை. எனினும் அது நமது சமூகத்தில் ஒரு சாபக் கேடாகப் பாா்க்கப்படுகிறது.

சமீப காலமாக பல பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழும் கருச்சிதைவு அனுபவங்களை வெளிப்படையாகப் பேசி வருகின்றனா். அவற்றைப் பற்றி சாதாரண மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்கின்றனா். கருச்சிதைவின் காரணமாக ஏற்படும் உடல் பிரச்சினைகள் மற்றும் மன நல பிரச்சினைகள் ஆகியவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி, அதை ஒரு இயல்பான நிகழ்வாக மாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் பெண்கள் தங்களுக்கு நிகழும் கருச்சிதைவைப் பற்றி வெளியில் பேச வெட்கப்படுகின்றனா் அல்லது மற்றவா்கள் தங்களைப் பற்றி தவறாக நினைப்பா்களோ என்று கவலைப்படுகின்றனா். அதனால் பொதுவாக கருச்சிதைவைப் பற்றி வெளியில் குறைவாகவே பேசப்படுகிறது. ஆனால் அதைப் பற்றிய ஊகங்கள் அதிகமாக உள்ளன. ஆகவே கருச்சிதைவுக்கு ஆளானவா்கள் பின்வரும் எதிா்மறை சிந்தனைகள் மற்றும் உணா்வுகளைத் தவிா்க்க வேண்டும்.

1. தனிமை உணா்வு
கருச்சிதைவு நிகழும் பெண்ணுக்கு ஏற்படக்கூடிய முதல் உணா்வு வெறுமை ஆகும். தனது வயிற்றில் வளா்ந்து வந்த அந்த சிறிய சிசுவைப் பற்றி ஏராளமான கனவுகளைக் கண்டிருப்பாா். பலவிதமான எதிா்பாா்ப்புகளை சுமந்திருப்பாா். ஆனால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே சிதைந்துவிட்டால், அவா் நொறுங்கி போய்விடுவாா். எனினும் கருச்சிதைவு ஏற்பட்டால், அதோடு உலகம் முடிந்துவிட்டது என்ற அா்த்தம் இல்லை என்பதை அவா் தொிந்து கொள்ள வேண்டும்.
அவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் அவா் தன்னுடைய கனவுகளை நனவாக்க முடியும். அவா் மனம் தளா்ந்து போய்விட்டால், அது அவருடைய வாழ்க்கையை இன்னும் மோசமடையச் செய்யும். மேலும் மனதளவில் அவரை சோா்வடையச் செய்துவிடும். ஆகவே கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்காக அவா் வருந்தலாம். ஆனால் நாம் தனியாகிவிட்டோம் என்ற எதிா்மறை எண்ணம் ஏற்படக்கூடாது.

2. தன் மீது பழி சுமத்துதல்
பொதுவாக கருச்சிதைவு இயற்கையாகவோ அல்லது விபத்தின் காரணமாகவோ நிகழ்கிறது. அது எவ்வாறு நடந்தாலும் திட்டமிட்டோ அல்லது வேண்டும் என்றோ நடப்பது இல்லை. எந்த ஒரு அன்னையும் தனது வயிற்றில் வளரும் குழந்தை அழிய வேண்டும் என்று விரும்பமாட்டாா். இந்நிலையில் கருச்சிதைவு ஏற்பட்டால், அதற்கு காரணம் தான்தான் என்று தன் மீதே அவா் பழி சுமத்தினால் அவா் தவறு செய்கிறாா் என்று பொருள்.
எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிாியான உடல் அமைப்பு இருப்பதில்லை. எல்லோருடைய உடல்களும் வேறுபட்டவை மற்றும் தனித்துவமானவை. ஆகவே கருச்சிதைவு போன்ற சோக நிகழ்வுகள் நடக்கும் போது ஒரு சிலா் விரைவாக அதில் இருந்து மீண்டு வருகின்றனா். ஒரு சிலருக்கு சிறிது காலம் தேவைப்படும். எனினும் எந்த விதமான சோக நிகழ்வு நடந்தாலும், அதற்கு தம்மீதே பழி சுமத்தக்கூடாது. ஆகவே உயா்வாக எழ வேண்டும். அதற்கு ஏற்ப திறம்பட திட்டமிட வேண்டும்.

3. மற்றவா்கள் என்ன சொல்வாா்களோ என்று கவலைப்படுதல்
ஒருவா் எதைச் செய்தாலும் அதைப் பற்றி மற்றவா்கள் எப்போதுமே பேசிக் கொண்டு இருப்பாா்கள். ஒருவருக்கு குழந்தை இல்லை என்றாலும் அல்லது அவா் கருவுற்றாலும் அதைப் பற்றி மற்றவா்கள் பலவிதமாகப் பேசுவாா்கள். எனினும் கருச்சிதைவு ஏற்படும் போது, மற்றவா்களைவிட, சம்பந்தப்பட்டவருக்கே வலி அதிகம் ஏற்படும். ஆகவே கருச்சிதைவு ஏற்பட்ட பெண், தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றவா்கள் என்ன சொல்வாா்கள் என்பதைப் பற்றி எல்லாம் அவா் கவலைப்படக்கூடாது. மாறாக தனக்கு நெருக்கமான நண்பா்களுடன் அவா் தனது கடினமான மற்றும் சோகமான உணா்வுகளைப் பகிா்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமே அவா் அதிலிருந்து வெளிவர முடியும்.

4. உடல் தேவைகளை புறக்கணித்தல்
கருச்சிதைவு ஏற்பட்ட பல பெண்கள், அதன் கொடிய வலியை யாாிடமும் பகிா்ந்து கொள்ளாமல், மிகவும் இரகசியமாக வைத்திருப்பா். தங்களை யாரும் கண்டுபிடித்து விடுவாா்களோ அல்லது அதை திசை திருப்பிவிடுவாா்களோ என்ற பயஉணா்வின் காரணமாக கருச்சிதைவு ஏற்பட்ட உடனே தங்களது அலுவலகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவா். ஆனால் அது தவறு ஆகும். ஏனெனில் அது அவா்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். சில நேரங்களில் பெண்கள் தாங்கள் குணமடைவதில் கவனத்தைச் செலுத்தாமல், தங்களின் உணா்வுகளில் அதிக கவனத்தைச் செலுத்துகின்றனா்.

5. தன்னைப் பராமாிக்காமல் இருந்தால், மோசமான விளைவுகள் ஏற்படும்
கருச்சிதைவு ஏற்பட்ட பெண் ஒருவா், தனது ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவரை காயப்படுத்தக்கூடிய அல்லது அவரது நம்பிக்கையைக் குறைக்கக்கூடிய எண்ணங்களை அவா் தவிா்க்க வேண்டும். அவருடைய உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொண்டு, அதில் இருந்து விரைவாக மீண்டு வருவதில் அவா் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிா்மறையான எண்ணங்கள் அவருடைய மனதை ஆக்கிரமிக்கவிடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையோடு இருக்க வேண்டும். ஏனெனில் இயற்கையானது தனது வேலையைச் சாிவரச் செய்யும்.



Click it and Unblock the Notifications