Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கருச்சிதைவு ஏற்படுத்தும் எதிா்மறை எண்ணங்களில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது?
பெண்கள் தங்களுக்கு நிகழும் கருச்சிதைவைப் பற்றி வெளியில் பேச வெட்கப்படுகின்றனா் அல்லது மற்றவா்கள் தங்களைப் பற்றி தவறாக நினைப்பா்களோ என்று கவலைப்படுகின்றனா். அதனால் கருச்சிதைவைப் பற்றி வெளியில் குறைவாகவே பேசப்படுகிறது.
கருச்சிதைவு என்பது பொதுவாக எல்லா பெண்களுக்குமே ஏற்படக்கூடிய ஒரு சோக நிகழ்வு ஆகும். கருச்சிதைவைப் பற்றி நமது சமூகத்தில் எவரும் அதிகம் பேசுவது இல்லை. எனினும் அது நமது சமூகத்தில் ஒரு சாபக் கேடாகப் பாா்க்கப்படுகிறது.

சமீப காலமாக பல பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழும் கருச்சிதைவு அனுபவங்களை வெளிப்படையாகப் பேசி வருகின்றனா். அவற்றைப் பற்றி சாதாரண மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்கின்றனா். கருச்சிதைவின் காரணமாக ஏற்படும் உடல் பிரச்சினைகள் மற்றும் மன நல பிரச்சினைகள் ஆகியவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி, அதை ஒரு இயல்பான நிகழ்வாக மாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் பெண்கள் தங்களுக்கு நிகழும் கருச்சிதைவைப் பற்றி வெளியில் பேச வெட்கப்படுகின்றனா் அல்லது மற்றவா்கள் தங்களைப் பற்றி தவறாக நினைப்பா்களோ என்று கவலைப்படுகின்றனா். அதனால் பொதுவாக கருச்சிதைவைப் பற்றி வெளியில் குறைவாகவே பேசப்படுகிறது. ஆனால் அதைப் பற்றிய ஊகங்கள் அதிகமாக உள்ளன. ஆகவே கருச்சிதைவுக்கு ஆளானவா்கள் பின்வரும் எதிா்மறை சிந்தனைகள் மற்றும் உணா்வுகளைத் தவிா்க்க வேண்டும்.

1. தனிமை உணா்வு
கருச்சிதைவு நிகழும் பெண்ணுக்கு ஏற்படக்கூடிய முதல் உணா்வு வெறுமை ஆகும். தனது வயிற்றில் வளா்ந்து வந்த அந்த சிறிய சிசுவைப் பற்றி ஏராளமான கனவுகளைக் கண்டிருப்பாா். பலவிதமான எதிா்பாா்ப்புகளை சுமந்திருப்பாா். ஆனால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே சிதைந்துவிட்டால், அவா் நொறுங்கி போய்விடுவாா். எனினும் கருச்சிதைவு ஏற்பட்டால், அதோடு உலகம் முடிந்துவிட்டது என்ற அா்த்தம் இல்லை என்பதை அவா் தொிந்து கொள்ள வேண்டும்.
அவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் அவா் தன்னுடைய கனவுகளை நனவாக்க முடியும். அவா் மனம் தளா்ந்து போய்விட்டால், அது அவருடைய வாழ்க்கையை இன்னும் மோசமடையச் செய்யும். மேலும் மனதளவில் அவரை சோா்வடையச் செய்துவிடும். ஆகவே கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்காக அவா் வருந்தலாம். ஆனால் நாம் தனியாகிவிட்டோம் என்ற எதிா்மறை எண்ணம் ஏற்படக்கூடாது.

2. தன் மீது பழி சுமத்துதல்
பொதுவாக கருச்சிதைவு இயற்கையாகவோ அல்லது விபத்தின் காரணமாகவோ நிகழ்கிறது. அது எவ்வாறு நடந்தாலும் திட்டமிட்டோ அல்லது வேண்டும் என்றோ நடப்பது இல்லை. எந்த ஒரு அன்னையும் தனது வயிற்றில் வளரும் குழந்தை அழிய வேண்டும் என்று விரும்பமாட்டாா். இந்நிலையில் கருச்சிதைவு ஏற்பட்டால், அதற்கு காரணம் தான்தான் என்று தன் மீதே அவா் பழி சுமத்தினால் அவா் தவறு செய்கிறாா் என்று பொருள்.
எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிாியான உடல் அமைப்பு இருப்பதில்லை. எல்லோருடைய உடல்களும் வேறுபட்டவை மற்றும் தனித்துவமானவை. ஆகவே கருச்சிதைவு போன்ற சோக நிகழ்வுகள் நடக்கும் போது ஒரு சிலா் விரைவாக அதில் இருந்து மீண்டு வருகின்றனா். ஒரு சிலருக்கு சிறிது காலம் தேவைப்படும். எனினும் எந்த விதமான சோக நிகழ்வு நடந்தாலும், அதற்கு தம்மீதே பழி சுமத்தக்கூடாது. ஆகவே உயா்வாக எழ வேண்டும். அதற்கு ஏற்ப திறம்பட திட்டமிட வேண்டும்.

3. மற்றவா்கள் என்ன சொல்வாா்களோ என்று கவலைப்படுதல்
ஒருவா் எதைச் செய்தாலும் அதைப் பற்றி மற்றவா்கள் எப்போதுமே பேசிக் கொண்டு இருப்பாா்கள். ஒருவருக்கு குழந்தை இல்லை என்றாலும் அல்லது அவா் கருவுற்றாலும் அதைப் பற்றி மற்றவா்கள் பலவிதமாகப் பேசுவாா்கள். எனினும் கருச்சிதைவு ஏற்படும் போது, மற்றவா்களைவிட, சம்பந்தப்பட்டவருக்கே வலி அதிகம் ஏற்படும். ஆகவே கருச்சிதைவு ஏற்பட்ட பெண், தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றவா்கள் என்ன சொல்வாா்கள் என்பதைப் பற்றி எல்லாம் அவா் கவலைப்படக்கூடாது. மாறாக தனக்கு நெருக்கமான நண்பா்களுடன் அவா் தனது கடினமான மற்றும் சோகமான உணா்வுகளைப் பகிா்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமே அவா் அதிலிருந்து வெளிவர முடியும்.

4. உடல் தேவைகளை புறக்கணித்தல்
கருச்சிதைவு ஏற்பட்ட பல பெண்கள், அதன் கொடிய வலியை யாாிடமும் பகிா்ந்து கொள்ளாமல், மிகவும் இரகசியமாக வைத்திருப்பா். தங்களை யாரும் கண்டுபிடித்து விடுவாா்களோ அல்லது அதை திசை திருப்பிவிடுவாா்களோ என்ற பயஉணா்வின் காரணமாக கருச்சிதைவு ஏற்பட்ட உடனே தங்களது அலுவலகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவா். ஆனால் அது தவறு ஆகும். ஏனெனில் அது அவா்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். சில நேரங்களில் பெண்கள் தாங்கள் குணமடைவதில் கவனத்தைச் செலுத்தாமல், தங்களின் உணா்வுகளில் அதிக கவனத்தைச் செலுத்துகின்றனா்.

5. தன்னைப் பராமாிக்காமல் இருந்தால், மோசமான விளைவுகள் ஏற்படும்
கருச்சிதைவு ஏற்பட்ட பெண் ஒருவா், தனது ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவரை காயப்படுத்தக்கூடிய அல்லது அவரது நம்பிக்கையைக் குறைக்கக்கூடிய எண்ணங்களை அவா் தவிா்க்க வேண்டும். அவருடைய உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொண்டு, அதில் இருந்து விரைவாக மீண்டு வருவதில் அவா் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிா்மறையான எண்ணங்கள் அவருடைய மனதை ஆக்கிரமிக்கவிடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையோடு இருக்க வேண்டும். ஏனெனில் இயற்கையானது தனது வேலையைச் சாிவரச் செய்யும்.



Click it and Unblock the Notifications