Just In
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 12 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Movies கமலுக்கான ஆதரவா?.. திடீரென உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பூஜா குமார்!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குழந்தைகள் பெண்ணின் கருவறையில் எப்படி உருவாகின்றன?
குழந்தைகள் என்பவர்கள் கடவுள் கொடுத்த பரிசுகள்; இந்த பதிப்பில் குழந்தைகள் பெண்ணின் கருவறையில் எப்படி உருவாகின்றன என்று படித்து அறியலாம்.
நம்மில் அனைவரும் பிறந்து வளர்ந்த பின் கல்யாணம் செய்து கொள்கிறோம்; நமக்கு பின் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆனால், குழந்தைகள் எப்படி பிறக்கின்றன அதாவது எப்படி உருவாகின்றன என்று எப்பொழுதாவது நாம் சிந்தித்தது உண்டா? உடலால் உறவு கொள்கிறோம், முட்டைகள் இணைகின்றன, குழந்தை பிறக்கிறது என்று மேலோட்டமாக மட்டுமே இதுவரை அறிந்து இருக்கிறோம்.
இந்த பதிப்பின் மூலம் குழந்தைகள் எப்படி உருவாகின்றன என்ற அதிசய ஆச்சரியத்தை பற்றி, உறவினால் எப்படி உயிர் உருவாகிறது என்பது பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.
பெண்ணின் உடல் அமைப்பு!
பெண்கள் பிறக்கும் பொழுது மில்லியன் அளவு கருமுட்டைகளுடன் பிறக்கின்றனர்; அவர்கள் வளர வளர இந்த முட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகின்றன. பெண்களின் உடலில் இந்த முட்டைகள் உருவாக்கம் பிறத்தலின் போது மட்டுமே நடக்கும், ஒரு முறை மட்டுமே உருவாகும் விஷயம் ஆகும். இப்படி உருவான முட்டைகள் பெண்கள் மாதவிடாய் பருவத்தை எட்டும் பொழுது சில நூறு முட்டைகள் மட்டுமே இருக்கும்.
சீக்கிரம் கல்யாணம்!
மற்ற அனைத்து முட்டைகளும் அதற்கு முன்னரே இறந்து போய்விடும்; இப்படி மீதம் இருக்கும் முட்டைகளும் ஓவ்வொரு மாதவிடாயின் பொழுதும் ஒரு சில முட்டைகள் என இறந்து கொண்டே வரும். இந்த காரணத்தால் தான் பெரியவர்கள் பெண் பிள்ளைகளுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுவது. பெண்கள் 35 அல்லது 40 வயதை எட்டும் பொழுது பெரும்பாலானவர்களுக்கு இந்த முட்டைகள் முழுவதுமாக தீர்ந்து விடும்.
ஆண்களின் உடல் அமைப்பு!
ஆண்களின் உடலில் கூட பெண்களை போல தான், அவர்கள் பிறக்கும் பொழுது மில்லியன் கணக்கில் விந்து அணுக்கள் உருவாகும். ஆனால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. ஆண்களின் வாழ்க்கையில் பிறந்த பொழுது உருவானது போல், ஒவ்வொரு நாளும் மில்லியன் விந்து அணுக்கள் உருவாகும். இது ஆண்கள் இறக்கும் வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கும்.
ஆரோக்கியம் முக்கியம்!
என்ன தான் தினந்தோறும் முட்டைகள் உற்பத்தி ஆனாலும், அதில் ஆரோக்கியமாக இருக்கும் அணுக்கள் வெகு சிலவே. அதிலும் ஆண்களுக்கு புகை மற்றும் மது போன்ற பழக்கங்கள் இருந்தால், முட்டைகளின் சேதம் அதிகமாக காணப்படும். ஆண்களில் விந்து அணுக்கள் தினம் உற்பத்தி ஆனாலும், அவை முழுமையான வளர்ச்சியை பெற 64 முதல் 72 நாட்கள் தேவைப்படும்.
மேலும் படிக்க: இன்று குருவின் பார்வை படப்போகும் ராசி எது? யாருக்கு என்ன தருவார்?
சுய இன்பம் உதவுமா?
ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு பின் உடலால் உறவு கொண்ட பின் தான் ஆண்களின் விந்து அணுக்கள் பெண்ணின் உடலினுள் இடமாற்றம் அடைகின்றன. இதில் திருமணத்திற்கு முன் அல்லது திருமணத்திற்கு பின் அவ்வப்போது, சுய இன்பம் காண்பது பெண்களுக்கு கொஞ்சம் பலன் அளிக்கும் எனவும், ஆண்கள் கொஞ்சம் கவனத்தோடு சுய இன்பம் மேற்கொள்ளுதல் வேண்டும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.
குழந்தை எப்படி உருவாகும்?
ஆணும் பெண்ணும் காதலோடு உறவு கொள்ளும் பொழுது, ஆணின் விந்து அணுக்கள் பெண்ணின் உடலுக்குள் செல்கின்றன. பெண்ணின் உடலில் மாதவிடாய் முடிந்த பின் 9 ஆம் நாளில் இருந்து 28 ஆம் நாள் வரை அண்ட அணு தயார் நிலையை அடைந்து, ஆணின் விந்து அணுவிற்காக பெலோப்பியன் குழாயில் காத்து இருக்கும். உறவு கொள்வதனால், பெண்ணின் உடலில் நுழையும் விந்துக்கள் பெண்ணின் அண்ட முட்டையை அடைய நீந்தி செல்ல முற்படும்.
பயணம் எளிதானதா?
இவ்வாறு விந்து அணு மேற்கொள்ளும் பயணம் மிகவும் கடினமானது; மில்லியன் விந்து அணுக்கள் பெண்ணின் உடலில் கலவி கொல்வதால் நுழையும்; அதில் முக்கால் வாசி பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் விஷத்தன்மை கொண்ட அமிலத்தால் அளிக்கப்பட்டு விடும்.
ஆரோக்கியமான விந்து அணுக்கள் அந்த அமிலத்தை எதிர்த்து போராடி மேலும் உள்ளே செல்லும்; அங்கு பெண்ணின் பிறப்புறுப்பு சளி போன்ற திரவம், மறுபடியும் விந்து அணுக்களை தடுக்கும். அந்த நிலையையும் ஆரோக்கியமான விந்து அணுக்களால் மட்டுமே கடக்க முடியும்; மற்றவை அங்கேயே மாண்டு போகும்.
வெல்வது யார்?
இவ்வாறு பெண்ணின் உடலினுள் நுழையும் விந்து அணுக்கள் பெலோப்பியன் குழாயினால் மீண்டும் தடுக்கப்படும்; அந்த தடையையும் மீறி ஒரு விந்து அணு உள்ளே நுழைந்து பெண்ணின் அண்டத்தை அடைந்து கருவுறுதலை தொடங்கும். ஓர் விந்து அணு குழாயை தாண்டிய உடனேயே, குழாய் மற்ற விந்து அணுக்கள் உள்ளே நுழையாதவாறு மூடி விடும்.
எத்துணை அதிசயம் பாருங்கள்! இந்த கருவுறுதலை தொடங்க எத்தனிக்கும் விந்து அணு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; மேலும் 6 முதல் 7 அங்குலம் இருக்க வேண்டும். இந்த கருவுறுதல் நிகழ்வு 3 முதல் 4 நாட்கள் நடைபெறும்.
குழந்தை உருவாகி விடுமா?
கருவுறுதல் நிகழ்வு வெற்றி அடைந்தாள் குழந்தை உருவாகி விடும்; இல்லையெனில் மாதவிடாய் வெளிப்பட்டு விடும். பெண்ணின் உடலில் மாதவிடாய் தள்ளிப்போனால், கர்ப்பத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் குழந்தை உருவாகி விட்டது என்று பொருள். இதில் குழந்தை ஆணா பெண்ணா என்பது கருவுறுதலில், எந்த முட்டையின் பங்கு அதிகம் இருந்ததோ, அதன்படி நடக்கும்.
கருவுறுதலில் ஆணின் விந்து அணு நன்கு செயல்பட்டு, அந்த குரோமோசோம் அதிகமானால், ஆண் குழந்தையும், இல்லை எனில் பெண் குழந்தையும் பிறக்கும்; இப்படி தான் குழந்தைகள் பெண்ணின் கருவறையில் உருவாகிறார்கள்!