Just In
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 10 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எப்போது சிசேரியன் அவசியம்? அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய உண்மைகள்!
பிரசவத்தின் போது சில மருத்துவ நிலை அல்லது சிரமங்கள் ஏற்படும் வகையில், வலுவான காரணம் இருந்தால் மட்டுமே சிசெரியம் அவசியம்.
ஆனால், நாம் பிரசவலி வந்தாலே பயந்து சிசேரியன் செய்ய ஒப்புதல் கூறிவிடுகிறோம். சிசேரியன் செய்தால் லாபம் என்பதால் பல தனியார் மருத்துவமனைகளும் சிசேரியன் செய்ய வைக்க தான் முயற்சி செய்கின்றனர்.
உண்மையில் எந்தெந்த நிலைகள் நேர்ந்தால், சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது குறித்து குழந்தை பெற்றுக்கொள்ளவிருக்கும் தம்பதிகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பணம் போனால் போகட்டும் என நினைப்பவர்கள், சுகப்பிரசவத்தை விட, சிசேரியன் தான் பிரசவத்திற்கு பிறகு அதிக வலி மற்றும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
காரணம் #1
பிரசவ வலி தாமதம் ஆவது, பிரசவத்திற்கு குறித்த நேரம் வரை பிரசவ வலியே இல்லாமல் இருப்பது.
காரணம் #2
குழந்தையின் இதயத்துடிப்பு குறைய துவங்குவது அல்லது குறைந்து காணப்பட்டால்.
காரணம் #3
தொப்புள்கொடி குழந்தையை சுற்றி இருந்தாலோ, குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பது கண்டரியப்பட்டாலோ.
காரணம் #4
குழந்தை இயல்பான எடைக்கு அதிகமாக இருந்தாலோ, உருவத்தில் பெரிதாக இருந்தாலோ.
காரணம் #5
தாயின் கருவறையில், குழந்தை சிக்கலான நிலையில் இருந்தால்.
காரணம் #6
இரட்டை குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்கு மேலான எண்ணிக்கையில் இருந்தால்.
காரணம் #7
தாய்க்கு பிறப்புறுப்பில் நோய் தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால்.
காரணம் #8
கர்ப்பப்பை வெடிப்பு / பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால்.