Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!
அக்காலத்தில் நம் தாத்தா பாட்டிகள் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து எப்படியே வளர்த்து ஆளாக்கிவிட்டனர். ஆனால் இன்றைய காலத்தில் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தாலே அது பெரிய சாதனையாகும். அதிலும் 2 குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தாய், தந்தை இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
பிறப்பு கட்டுப்பாடு முறையினால் எதிர்கொள்ளக்கூடிய பக்க விளைவுகள்!!!
அதற்காக இரண்டு குழந்தைகளுக்கு மேல் கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடாமல் இருக்க முடியுமா என்ன? அப்படி ஈடுபட்டாலும் கருத்தரிக்காமல் இருப்பதற்கு, தற்போது ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் அல்லது கருத்தடை மாத்திரைகளை எடுப்பது.
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்!!!
இது கருத்தரிக்காமல் இருப்பதற்கு பெண்கள் எடுக்கும் மாத்திரைகளாகும். மேலும் இது பல்வேறு பக்கவிளைவுகளையும் உண்டாக்கக்கூடியது. இங்கு கருத்தடை மாத்திரைகள் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விஷயம் #1
உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரையில் ஒன்று பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளாகும். ஆய்வு ஒன்றில் சுமார் 100 மில்லியன் மக்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வருவது தெரிய வந்துள்ளது.

விஷயம் #2
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் கருப்பை வேலை செய்வது போல உடலை ஏமாற செய்து, கருத்தரிக்க முடியாமல் செய்கிறது.

விஷயம் #3
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையை பெண்கள் உட்கொண்ட பின், அவர்களது உடலால் குறிப்பிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி, வைட்டமின் பி, ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவற்றை உறிஞ்ச முடியாமல் போல், இந்த ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் அவஸ்தைப்படக்கூடும்.

விஷயம் #4
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பெண்களின் உடலில் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, உடலுறவில் ஈடுபடும் ஆசையைக் குறைக்கும்.

விஷயம் #5
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் சிஸ்டிக் முகப்பரு மற்றும் ஹார்மோன் கோளாறுகளான PCOD போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

விஷயம் #6
நீண்ட நாட்களாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வரும் பெண்களுக்கு மன இறுக்கம், மிகுதியான சோர்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. சொல்லப்போனால், மன நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடக்கக்கூடும்.

விஷயம் #7
தொடர்ச்சியாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வருவது தீவிர நோய்களான மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், பக்கவாதம் மற்றும் மலட்டுத்தன்மையுடன் தொடர்பு கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications











