Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!
அக்காலத்தில் நம் தாத்தா பாட்டிகள் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து எப்படியே வளர்த்து ஆளாக்கிவிட்டனர். ஆனால் இன்றைய காலத்தில் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தாலே அது பெரிய சாதனையாகும். அதிலும் 2 குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தாய், தந்தை இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
பிறப்பு கட்டுப்பாடு முறையினால் எதிர்கொள்ளக்கூடிய பக்க விளைவுகள்!!!
அதற்காக இரண்டு குழந்தைகளுக்கு மேல் கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடாமல் இருக்க முடியுமா என்ன? அப்படி ஈடுபட்டாலும் கருத்தரிக்காமல் இருப்பதற்கு, தற்போது ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் அல்லது கருத்தடை மாத்திரைகளை எடுப்பது.
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்!!!
இது கருத்தரிக்காமல் இருப்பதற்கு பெண்கள் எடுக்கும் மாத்திரைகளாகும். மேலும் இது பல்வேறு பக்கவிளைவுகளையும் உண்டாக்கக்கூடியது. இங்கு கருத்தடை மாத்திரைகள் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விஷயம் #1
உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரையில் ஒன்று பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளாகும். ஆய்வு ஒன்றில் சுமார் 100 மில்லியன் மக்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வருவது தெரிய வந்துள்ளது.

விஷயம் #2
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் கருப்பை வேலை செய்வது போல உடலை ஏமாற செய்து, கருத்தரிக்க முடியாமல் செய்கிறது.

விஷயம் #3
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையை பெண்கள் உட்கொண்ட பின், அவர்களது உடலால் குறிப்பிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி, வைட்டமின் பி, ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவற்றை உறிஞ்ச முடியாமல் போல், இந்த ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் அவஸ்தைப்படக்கூடும்.

விஷயம் #4
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பெண்களின் உடலில் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, உடலுறவில் ஈடுபடும் ஆசையைக் குறைக்கும்.

விஷயம் #5
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் சிஸ்டிக் முகப்பரு மற்றும் ஹார்மோன் கோளாறுகளான PCOD போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

விஷயம் #6
நீண்ட நாட்களாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வரும் பெண்களுக்கு மன இறுக்கம், மிகுதியான சோர்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. சொல்லப்போனால், மன நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடக்கக்கூடும்.

விஷயம் #7
தொடர்ச்சியாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வருவது தீவிர நோய்களான மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், பக்கவாதம் மற்றும் மலட்டுத்தன்மையுடன் தொடர்பு கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications