Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!
அக்காலத்தில் நம் தாத்தா பாட்டிகள் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து எப்படியே வளர்த்து ஆளாக்கிவிட்டனர். ஆனால் இன்றைய காலத்தில் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தாலே அது பெரிய சாதனையாகும். அதிலும் 2 குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தாய், தந்தை இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
பிறப்பு கட்டுப்பாடு முறையினால் எதிர்கொள்ளக்கூடிய பக்க விளைவுகள்!!!
அதற்காக இரண்டு குழந்தைகளுக்கு மேல் கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடாமல் இருக்க முடியுமா என்ன? அப்படி ஈடுபட்டாலும் கருத்தரிக்காமல் இருப்பதற்கு, தற்போது ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் அல்லது கருத்தடை மாத்திரைகளை எடுப்பது.
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்!!!
இது கருத்தரிக்காமல் இருப்பதற்கு பெண்கள் எடுக்கும் மாத்திரைகளாகும். மேலும் இது பல்வேறு பக்கவிளைவுகளையும் உண்டாக்கக்கூடியது. இங்கு கருத்தடை மாத்திரைகள் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விஷயம் #1
உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரையில் ஒன்று பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளாகும். ஆய்வு ஒன்றில் சுமார் 100 மில்லியன் மக்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வருவது தெரிய வந்துள்ளது.

விஷயம் #2
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் கருப்பை வேலை செய்வது போல உடலை ஏமாற செய்து, கருத்தரிக்க முடியாமல் செய்கிறது.

விஷயம் #3
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையை பெண்கள் உட்கொண்ட பின், அவர்களது உடலால் குறிப்பிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி, வைட்டமின் பி, ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவற்றை உறிஞ்ச முடியாமல் போல், இந்த ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் அவஸ்தைப்படக்கூடும்.

விஷயம் #4
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பெண்களின் உடலில் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, உடலுறவில் ஈடுபடும் ஆசையைக் குறைக்கும்.

விஷயம் #5
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் சிஸ்டிக் முகப்பரு மற்றும் ஹார்மோன் கோளாறுகளான PCOD போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

விஷயம் #6
நீண்ட நாட்களாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வரும் பெண்களுக்கு மன இறுக்கம், மிகுதியான சோர்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. சொல்லப்போனால், மன நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடக்கக்கூடும்.

விஷயம் #7
தொடர்ச்சியாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வருவது தீவிர நோய்களான மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், பக்கவாதம் மற்றும் மலட்டுத்தன்மையுடன் தொடர்பு கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications