Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்
சுகப்பிரசவத்திற்குப் பின் பெண்ணின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா?
சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களின் மனதில் எழும் கேள்வி, பிரசவத்திற்கு பின் யோனிப் பகுதி தளர்ந்து விடுமா என்பது தான். இங்கு அதுக்குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பல பெண்களுக்கும் சுகப்பிரசவத்திற்குப் பின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா என்ற சந்தேகம் எழும். ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக வயிற்றில் குழந்தை வளர வளர பெண்களின் உடலில் தொடர்ச்சியாக மாற்றங்கள் மற்றும் குழந்தை இருப்பதற்கு ஏற்ற அளவும் கருப்பை மற்றும் வயிறு விரிவடையும்.

கர்ப்பமாக இருக்கும் போது மில்லியன் கணக்கிலான கேள்விகள் பெண்களின் மனதில் எழும். அதில் சில கேள்விகள் குழந்தைப் பேற்றிற்குப் பின் அவர்களது உடல்நலம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். மேலும் சிசேரியன் பிரசவத்தை விட சுகப்பிரசவம் மிகவும் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இதனால் பல பெண்களும் சுகப்பிரசவத்தையே விரும்புகின்றனர்.
சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களின் மனதில் எழும் கேள்வி, பிரசவத்திற்கு பின் யோனிப் பகுதி தளர்ந்து விடுமா என்பது தான். இப்போது அதுக் குறித்து காண்போம்.

சுகப்பிரசவத்தின் போது என்ன நடைபெறும்?
சுகப்பிரசவத்தின் போது, குழந்தை யோனியில் உள்ள கருப்பை வாயின் வழியே வெளிவரும். இப்படி குழந்தை வெளிவரும் போது, கருப்பையின் வாயானது 5 செ.மீ வரை விரிவடையும்.

பிரசவம் முடிந்த பின்...
பிரசவத்திற்கு பின், யோனிப் பகுதிய தற்காலிகமாக தளர்ந்து இருக்கும். சில பெண்கள் யோனிப்பகுதி பல காலம் தளர்ந்து இருக்கும். இது அப்பெண்ணின் வயது, பிறந்திருக்கும் குழந்தைகளைப் பொறுத்தது.

பாலியல் வாழ்க்கை பாழாகுமா?
சுகப்பிரசவத்தினால் பாலியல் வாழ்க்கை பாழாகுமோ என்ற அச்சம் பல பெண்களுக்கும் இருக்கும். மேலும் பல பெண்களும், சுகப்பிரசவத்திற்குப் பின், யோனி தளர்ந்து இருப்பதால், தங்களது துணை பாலியல் இன்பத்தை அடைவதில்லை என்றும் புகார் கூறுகின்றனர்.

சர்வே
சர்வேக்களிலும் பல ஆண்கள் சுகப்பிரசவம் மூலம் குழந்தைப் பெற்ற துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது திருப்தி அடைவதில்லை என்று, பெண்கள் கூறுவதைப் போன்றே ஆண்களும் கூறினர்.

முடிவு
சுகப்பிரசவத்திற்கு பின் பல பெண்களின் யோனிப் பகுதி இறுக்கமடையாமல் தளர்ந்தே இருப்பதால், சுகப்பிரசவம் மூலம் குழந்தைப் பெற்றெடுத்த பெண்கள் யோனியை இறுக்கமடையச் செய்யும் உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் யோனிப்பகுதியை இறுக்கமடையச் செய்யலாம்.



Click it and Unblock the Notifications