Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
குழந்தைகளுக்கு இதய நோய்கள் வருவது எதனால்?
மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு இதய நோய்களால் பாதிக்கப்படுவதுண்டு. ஏன் இந்த பருவத்திலேயே நோய்கள் இதய நோய்கள் வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஏன் இதய நோய்கள் வருகிறது?
உலகளவில் 100 ல் ஒரு குழந்தைக்கு இதய நோய் உள்ளது. இதற்கான காரணம் எதுவென ஆராய்ச்சி செய்ததில், ஆக்ஸிஜன் குறைபாடே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
கரு வளர்ச்சியின்போது ஆக்ஸிஜன் போதிய அளவு கிடைக்காததால், செல் உளைச்சலுக்கு ஆளாகிறது. இந்த அழுத்ததை தவிர்க்க புரொட்டின் உற்பத்தியை தடுக்கிறது.
புரொட்டின் சரியான அளவு கிடைக்காவிட்டால் கரு சரியாக வளர்ச்சியடையாது. கருவில் முதலில் இதயம் தோன்றுவதால் அதன் வளர்ச்சியில் குறைகள் ஏற்படுகிறது. விளைவு இதய நோய். பிறப்பில் உண்டாகும் குறைபாடே இதய நோய்களுக்கு காரணம்.
ஆக்ஸிஜன் குறைப்பாட்டிற்கு காரணம் என்ன?
கருமுட்டைக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காததற்கு காரணம், தாய்க்கு உயர் ரத்த அழுத்தம், நிறைய மருந்துகள் உட்கொள்வது என நிறைய காரணங்களை சொல்லலாம் என்று ஜர்னல் டெவலப்மென்ட் என்ற மருத்துவ இதழ் கூறியுள்ளது.
ஆக்சிஜன் குறைப்பாடு தவிர்த்து, அதிகப்படியான வெப்ப நிலை, ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, மிகக் குறைவான ஊட்டச்சத்து, நச்சுக்கள் உடலில் உண்டாவது ஆகியவை செல் வளர்ச்சிகளை பாதிக்கலாம். இவற்றால் இதயம் மட்டுமல்லாது சிறு நீரக பாதிப்பும் உண்டாகிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்விற்காக, எலியின் கருமுட்டையில் ஆக்ஸிஜன் அளவை குறைத்தனர். 21 சதவீதத்திலிருந்து வெறும் 5.5. சதவீதத்திற்கு ஆக்ஸிஜன் அளவை குறைத்தனர். 8 மணி நேரத்திற்கு பின், கருவில் உருவான இதயம் பாதிப்படைந்தது தெரிய வந்தது. மனிதர்களுக்கும் இது போன்றே பல்வேறு இதய நோய்களுக்கு காரணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.



Click it and Unblock the Notifications


