Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
குழந்தைகளுக்கு இதய நோய்கள் வருவது எதனால்?
மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு இதய நோய்களால் பாதிக்கப்படுவதுண்டு. ஏன் இந்த பருவத்திலேயே நோய்கள் இதய நோய்கள் வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஏன் இதய நோய்கள் வருகிறது?
உலகளவில் 100 ல் ஒரு குழந்தைக்கு இதய நோய் உள்ளது. இதற்கான காரணம் எதுவென ஆராய்ச்சி செய்ததில், ஆக்ஸிஜன் குறைபாடே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
கரு வளர்ச்சியின்போது ஆக்ஸிஜன் போதிய அளவு கிடைக்காததால், செல் உளைச்சலுக்கு ஆளாகிறது. இந்த அழுத்ததை தவிர்க்க புரொட்டின் உற்பத்தியை தடுக்கிறது.
புரொட்டின் சரியான அளவு கிடைக்காவிட்டால் கரு சரியாக வளர்ச்சியடையாது. கருவில் முதலில் இதயம் தோன்றுவதால் அதன் வளர்ச்சியில் குறைகள் ஏற்படுகிறது. விளைவு இதய நோய். பிறப்பில் உண்டாகும் குறைபாடே இதய நோய்களுக்கு காரணம்.
ஆக்ஸிஜன் குறைப்பாட்டிற்கு காரணம் என்ன?
கருமுட்டைக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காததற்கு காரணம், தாய்க்கு உயர் ரத்த அழுத்தம், நிறைய மருந்துகள் உட்கொள்வது என நிறைய காரணங்களை சொல்லலாம் என்று ஜர்னல் டெவலப்மென்ட் என்ற மருத்துவ இதழ் கூறியுள்ளது.
ஆக்சிஜன் குறைப்பாடு தவிர்த்து, அதிகப்படியான வெப்ப நிலை, ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, மிகக் குறைவான ஊட்டச்சத்து, நச்சுக்கள் உடலில் உண்டாவது ஆகியவை செல் வளர்ச்சிகளை பாதிக்கலாம். இவற்றால் இதயம் மட்டுமல்லாது சிறு நீரக பாதிப்பும் உண்டாகிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்விற்காக, எலியின் கருமுட்டையில் ஆக்ஸிஜன் அளவை குறைத்தனர். 21 சதவீதத்திலிருந்து வெறும் 5.5. சதவீதத்திற்கு ஆக்ஸிஜன் அளவை குறைத்தனர். 8 மணி நேரத்திற்கு பின், கருவில் உருவான இதயம் பாதிப்படைந்தது தெரிய வந்தது. மனிதர்களுக்கும் இது போன்றே பல்வேறு இதய நோய்களுக்கு காரணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.



Click it and Unblock the Notifications














