Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் சிக்கல் !!
இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை உண்டாகக் கூடும் என எச்சரித்துள்ளனர்.

உடல் பருமனானவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தைக்கும், அம்மாவிற்கு வாழ் நாள் முழுவதும் பாதிப்புகள் உண்டாகலாம். என நார்வே பல்கலைக் கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் ட்ரினே என்பவர் கூறியிருக்கிறார்.
அதேபோல், உடல் பருமனானவர்களுக்கு சிசேரியன் செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. கர்ப்ப காலத்தில் பிரச்சனை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தை பெற்றபின்னும் தாய்- சேய் இருவர் உடல் நலனும் பாதிக்கும் எனவும் கூறுகிறார்.
ஆகவே உடல் பருமனை கட்டாயம் குறைக்க பெண்கள் முற்படவேண்டும். கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்ததை எப்போதும் கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சிகள் மிக அவசியம். உடல் பருமனானவர்கள் என்ரில்லாமல் எல்லா பெண்களும் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று கூறுகின்றார்.
உடற்பயிற்சி எந்த அளவு கர்ப்ப காலத்தி உதவி செய்யும் என ஆய்வு ஒன்றை நடத்தினர். இதில் உடல் பருமனான கர்ப்பிணிகள் இருகுழுவாக பிரிக்கப்பட்டனர்.
முதல் குழுவில் 91 கர்ப்பிணிகளுக்கு மிதமான உடற்பயிற்சிகள் தரப்பட்டன. 20 நிமிடங்கள் ட்ரெட்மில்லில் நடைபயிற்சி, தசைகளை வலுவாக்க சில பயிசிகள் தரப்பட்டன. இவர்களுக்கு இந்த உடற்பயிர்சிகள் கொடுத்து 3 வாரங்கள் கண்காணிப்பட்டார்கள். இன்னொரு குழுவிற்கு எந்த வித உடற்பயிற்சியும் தரப்படாமல், அவர்களை கண்காணித்தனர்.
இவர்களில் முதல் குழுவில் வெறும் 2 பெருக்கும், இரண்டாவது குழுவில் 9 பெருக்கும் சர்க்கரை வியாதி இருந்தது.
இந்த ஆய்வு தொடர்பான விரிவான கட்டுரை PLOS மெடிசின் என்ற இதழில் வெளியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications














