Just In
- 16 min ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 1 hr ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 1 hr ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Movies Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாவுக்கு என்ன நன்மை?
தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மட்டுமல்ல அம்மாவிற்கும் நல்லது தான். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராது என்று முந்தைய ஆய்வு ஒன்று கண்டுபிடித்தது.
அதேபோல், நாள்பட்ட நோயான சர்க்கரை வியாதியும் வருவது தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
பால் கொடுக்கும் போது, உடலிலுள்ள வளர்சிதை மாற்றத்தில் வழக்கதை விட மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கும் குறைவாக பால் கொடுப்பவர்களை விட, மூன்று மாதத்திற்கும் மேல் அதிகமாக பால் கொடுப்பவர்களுக்கு வளர்சிதை மாற்றம் மாறுபடுகிறது.
ரத்த பிளாஸ்மாவில் பாஸ்போ லிபிட் மற்றும் குறைந்த சங்கிலி கொண்ட அமினோ அமிலங்கள் குறைவாக உற்பத்தியாகின்றன. இதனால் வாழ் நாள் முழுவதும் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க முடியும் என்று ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதால் சர்க்கரை வியாதி தொடர்பான வளர்சிதை மாற்றத்தை நடக்கவிடாமல் பாதுகாக்கிறது. அதுவும் மூன்று மாதத்திற்கும் அதிகமாக கொடுப்பவர்களுக்கு சுமார் 15 வருட காலத்திற்கு சர்க்கரை வியாதி வராமல் காக்கும் என்றும் கூறுகின்றனர்.
சர்க்கரை வியாதி உள்ள பெண்கள் 200 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதேபோல், சர்க்கரை வியாதி அல்லாதவர்கள் 156 பேரிடமும் ஆய்வு செய்தனர்.
இதில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 3 மாதத்திற்கும் குறைவாக தாய்ப்பால் கொடுத்தவர்கள் என்று தெரிய வந்தது.
இப்போது இந்த ஆய்வின் நோக்கமே தாய்-சேய் இருவரின் நலனையும் பாதுகாக்க, தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுக்க வேண்டுமென்பது தான் என்று கூறுகிறார் தலைமை ஆய்வாளர் சேண்ட்ரா ஹெம்மல்.